ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :தனுசு

வணக்கம்.
தனுசு: மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதத்தில் பிறந்த தனுசு ராசி நேயர் களே!
ஆற்றலும்,பராக்கிரமும் ,தெய்வீக தன்மையும் கொண்ட தனுசு ராசியை சேர்ந்த உங்கள் ராசிக்கு, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில்  துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 12ஆம் இடமான விரய ஸ்தானமான  ,விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், தனுசு ராசிக்கு 4,6,8ஆம் இடமாகும்.குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவான் விரய ஸ்தானமான 12ஆம் இடத்தில் இருப்பதால் தேவையற்ற பயம் ஏற்படும்.அத்தியாவசிய செலவு மற்றும் வீண் செலவு செய்ய வேண்டி வரும்.கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.ஒரு சிலர் வெளிநாடு சென்று வருவார்கள்.
குரு பகவானின் பார்வை 4ஆம் இடமான மாதுர் ஸ்தானத்தை பார்ப்பதால் தாயின் பாசம் அதிகமாகும்.குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்து வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.விலகிய சொந்தங்கள் ஒன்று சேர்வார்கள்.உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும் குரு பகவான் 12ஆம் இடத்தில் மறைவதினால் நல்ல பலன்கள் நடை பெறும் .
குரு பகவானின் பார்வை சத்ரு ,நோய் ,கடன் ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் உதிரி ஆவார்கள்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.
சிறிய வியாதி வந்தாலும் அதற்கான தீர்வும் கிடைக்கும்.உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தை  குரு பகவான் பார்வை  செய்வதால் இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள்  உருவாகும்.வேறு மதத்தைச் சார்ந்தவர்களின் உதவி கிடைக்கும்.கொடுத்த கடன்கள் வசூல் ஆகும்.
           
௨ங்கள் ராசி அதிபதியான குரு பகவானை வியாழக்கிழமை காலை 6-7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி ,நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்கள் நடை பெறும்.
                                   நன்றி! 

சனி, 29 செப்டம்பர், 2018

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :விருச்சிகம்

வணக்கம்.
விருச்சிகம் :விசாகம் 4ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களில் பிறந்த விருச்சிகராசி நேயர்களே!
விவேகமும்,செயல் திறனும் கொண்ட விருச்சிக ராசியை சேர்ந்த உங்களுக்கு ,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் உங்கள் ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், விருச்சிக ராசிக்கு 5,7,9ஆம் இடமாகும்.குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம் .
ஜன்ம ராசியில் குரு பகவான் இருக்கும் போது உறவினர்கள் உங்களைப்பற்றி அவதூராக பேசி மகிழ்ச்சி அடைவார்கள்.வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக பேசவும்.தேவைக்கு .பணம் இருந்தாலும் எதையோ  இழந்தது போல் காட்சி அளிப்பீர்கள்.வீட்டில் உள்ள நபர்களுடன் கருத்து வேறு பாடு இருக்கும்.
குருவின் பார்வை 5ஆம் இடமான மீனம் ராசியை பார்ப்பதால் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள் .ஊர் எல்லையில் சொத்து வாங்குவீர்கள்.சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும்.
குருவின் பார்வை ஸப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டை பார்ப்பதால் திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெறும்.நண்பர்களிடம் தங்களின் வீட்டு விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம் .
குருவின் பார்வை 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் வேலை விஷயமாக அடிக்கடி பயணம் செய்ய வேண்டி வரும் .பணம் அதிகமாக வந்தாலும் அதற்கு தகுந்த செலவு செய்ய வேண்டி வரும்.முக்கியமாக ஜாமின் கையெழுத்துப் போடுவதை தவிர்க்கவும் .
உங்கள் ராசி அதிபதி செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலை சாற்றி ,நெய் தீபம் ஏற்றி செவ்வாய் கிழமை காலை 6-7மணி அளவில் செவ்வாய் ஓரையில் வணங்கி வர நன்மையான பலன்கள் நடைபெறும். தட்சிணாமூர்த்தியை .வியாழக்கிழமைகளில் முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பான பலன்கள் நடைபெறும்.
   
                                                                                    நன்றி!

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :துலாம்

வணக்கம்.
துலாம்:  சித்திரை3,4பாதங்கள்,சுவாதி,விசாகம் 1,2,3பாதங்களில் பிறந்த துலாம் ராசி நேயர்களே !
நீதியும் ,நேர்மையும் தெரிந்த துலாம் ராசியை சேர்ந்த உங்களுக்கு, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ,இரண்டாமிடமான தன ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், துலாம் ராசிக்கு 6,8,10ஆம் இடமாகும்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.v.i.p தொடர்பு கிடைக்கும்.புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.வீட்டில் சுப காரியம் நடைபெறும்.
குரு பகவான் 6ஆம் இடமான ரோக ஸ்தானத்தை பார்ப்பதால் நோய் நொடிகளை ஏற்படுத்தும்.எலும்பு,சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தி அதற்கான தீர்வும் கிடைக்கும்.
குரு பகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் ஏற்கனவே சேமித்து வைத்து இருக்கும் பணத்தை எடுத்து சந்தோசமாக செலவு செய்வீர்கள்.
குரு பகவான் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய பதவி கிடைக்கும்.புதிய வேலையில் அமர்த்தப்படுவீர்கள்.சிலர் சொத்துக்களை விற்று புதிய தொழில் தொடங்குவார்கள்.புதிய சூழ்நிலையில் வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
உங்கள் ராசி அதிபதி சுக்கிரபகவானை வெள்ளிக்கிழமை காலை 6-7மணி அளவில் சுக்கிர ஓரையில் வெள்ளை தாமரை மொட்டு வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேன்டும்.ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதனையும் ,மகாலெட்சுமியையும் வணங்கி வரவும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமுரத்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்களை அடையலாம்.
                                                                                 நன்றி


குரு ப்பெயர்ச்சிப் பலன்கள் :கன்னி.

வணக்கம்.
கன்னி: உத்திரம்2,3,4பாதம் ,அஸ்தம்,சித்திரை1,2பாதங்களில் பிறந்த கன்னி ராசிநேயர்களே!
சாதுர்யமாகவும் ,சாமார்த்தியமாகவும் பேசி அடுத்தவர்களை கவர்ந்திழுக்கும் கன்னி ராசியை சேர்ந்த உங்களுக்கு ,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி( 04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், முயற்சி ஸ்தானமான ,3ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானின் 5,7,9  பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், கன்னி ராசிக்கு 7,9,11ஆம் இடமாகும் .குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் எந்த வேலையும் போராடியே செய்ய முடியும் .
7ஆம் இடமான சப்தம ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் மனைவி அல்லது கணவன் சொல் கேட்டு நடக்கும் போது நல்ல பலன்கள் நடை பெறும்..உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது.
9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும்.வயது முதிர்ந்தவர்கள் ஆலோசனையை கேட்டு நடக்கும் போது செய்யும் செயல்கள் சிறப்படையும்.
11ஆம் இடமான லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் வங்கி சேமிப்பு உயரும் .நீண்ட நாட்களாக தடை பெற்ற செயல்கள் நடை பெறும்.
உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பகவானையும் ,அன்னை மீனாட்சியையும்
புதன் கிழமை காலை 6-7மணி அளவில் புதன் ஓரையில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பான பலன்களை அடையலாம்.












வெள்ளி, 28 செப்டம்பர், 2018

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :சிம்மம் .

வணக்கம்.
சிம்மம்: மகம்,பூரம்,உத்திரம்1ஆம் பாதத்தில் பிறந்த சிம்மம் ராசி நேயர்களே!
ஆற்றலும் பராக்கிரமும் பெற்ற உங்களுக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் பெயர்ச்சியாகி 4ஆம் இடத்திற்கு மாதுர் ஸ்தானமான விருச்சிக ராசிக்கு வருகிறார்.
குரு பகவானின் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையைப் பெறும் ராசிகள், சிம்ம ராசிக்கு 8,10,12ஆம் இடமாகும்.
நான்காம் இடத்தில்  குரு பகவான் இருப்பதால் இடமாற்ற சிந்தனை தோன்றும்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.தாயருக்கு வயிறு சம்பந்தமான பீடைகளை ஏற்படுத்தும். பழைய பொருட்களை விற்று ,புதிய விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
குரு  பகவானின் பார்வை 8ஆம் இடத்தில் பதிவதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் தொழிலில் இடமாற்றம் ஏற்பட்டு, புதிய பதவிகள் கிடைக்கும்.விரய ஸ்தானமான 12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் அலைச்சல் அதிகரிக்கும்.,தூக்கம்  வராமல் தடுமாற்றம் ஏற்ப்படும்.
உங்கள் ராசிக்கு அதிபதியான சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமை காலை 6-7மணி அளவில் சூரிய ஓரையில் செந்தாமரை மலர் வைத்து ,நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பான பலன்கள் நடைபெறும்.தட்சிணாமுர்த்தியை வியாழக்கிழமை முல்லை மலர் சாற்றி வழிபடவும்.
                            நன்றி.

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :கடகம் .

வணக்கம்.
கடகம்: புனர்பூசம் 4ஆம் பாதம் ,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்த கடகம் ராசி நேயர்களே!
தயாள குணமும்,மனவலிமையும் பெற்ற உங்களுக்கு ,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04.10.2018)அன்று வியாழக்கிழமை இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு மாதுர் ஸ்தானமான 4ஆம் வீட்டில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் பெயர்ச்சி ஆகி 5ஆம் வீடாகிய பஞ்சம ஸ்தானமான  விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறார்.
குரு பகவானின் பார்வை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .குரு பகவான் பார்வையைப் பெறும் ராசிகள் ,கடக ராசிக்கு1, 9,11ஆம் இடமாகும் .குருவிற்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம் .
கடக ராசியை குரு பார்ப்பதால் இது வரை நீங்கள் அனுபவித்து வந்த சுகப்பாதிப்புகள் நீங்கி வாழ்வில் மாறுதல்களை பெறுவீர்கள்.உங்கள் செல்வாக்கு உயரும், பொருளாத நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். .உத்தியோகத்தில் இருந்த தடைகள் மாறும்.9ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள்.லாப ஸ்தானமான 11ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக நிலுவையில்  உள்ள பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.வங்கிகளில் இருப்புத் தொகை அதிகரிக்கும். வயது முதிர்ந்த நபர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள குரு  பகவான் இட மாற்றம், வேலை மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்கள் ராசிக்கு அதிபதியான சந்திர பகவானை திங்கள் கிழமை வெள்ளை தாமரை மொட்டு வைத்து வழிபடவும் கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மனை திங்கள் கிழமை வழிபடவும்.கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை காலை 6 -7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி ,நெய் தீபம் ஏற்றி வழிபட இரட்டிப்பான நல்ல பலன்கள் நடைபெறும்

குருப் பெயர்ச்சிப் பலன்கள்:மிதுனம்.

வணக்கம்.
மிதுனம்: மிருகசீரிடம்3,4பாதம்,திருவாதிரை,புனர்பூசம் இந்த நட்சத்திரங்களில் பிறந்த மிதுன ராசி நேயர்களே! 
நல்ல மனவலிமையும் ,சிந்தனை வளமும் பெற்ற உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி பணவளர்ச்சியையும்,சிறு சோதனைகளையும் வழங்கும்.விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து  வந்த குரு  பகவான் ,ரோக,சத்ரு ஸ்தானமான 6ஆம் இடமான விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையை பெறும் ராசிகள் மீனம் ,ரிஷபம், கடகம் .
குருவின் பார்வைபெறும்  ராசிகள் ,மிதுனம் ராசிக்கு 2,10,12ஆம் இடமாகும்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டை தன காரகன் குரு பகவான் பார்க்கும் போது அளவிற்கு அதிகமாக செல்வங்கள் சேரும்,அதே நேரத்தில் ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் குரு இருப்பதால் அந்த பலனையும் சேர்த்து செய்யும்.நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.உடல் ரீதியாக சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சங்கடங்களை சமாளிக்க வேண்டிவரும்.
ஜீவன ஸ்தானமான 10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஜீவனத்திற்கு தேவையான பணம் கிடைக்கும்.விரய ஸ்தானமான 12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.செலவுகள் வராமல் இருப்பதற்கு தங்கள் குழந்தைகள் பெயரில் பணத்தை  வங்கிகளில் டெபாசிட் செய்யவும்.
                                 நன்றி .

வியாழன், 27 செப்டம்பர், 2018

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :ரிஷபம்

வணக்கம்.
ரிஷபம்: கார்த்திகை2,3,4ஆம் பாதம்,ரோகிணி,மிருகசீரிடம்1,2ஆம் பாதத்தில் பிறந்த ரிஷப ராசி நேயர்களே!
நளினமும்,கவர்ச்சியும் கொண்ட உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி ஒரு பொற்காலம்.
விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04-10-2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு ரோக ஸ்தானமான 6ஆம் இடத்தில்  துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ,சப்தம ஸ்தானமான 7ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம் .
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குருவின் பார்வை பெறும் ராசிகள் ரிஷப ராசிக்கு 1,3,11ஆம் இடமாகும்.
ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் பணம் பாக்கெட்டை நிரப்பும்.குருவின் அருள் கிடைக்கும்.குரு 7ஆம் இடத்தில் இருப்பதால் சுப காரியம் நடைபெறும்.
மூன்றாமிடமான சகாயஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிறிய தூரப் பயணங்கள் ஏற்படும்.இளைய சகோதர ஸ்தானத்தை பிரபலமடையச் செய்யும்.
பதினோராமிடமாகிய லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வயது முதிர்ந்த பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.அவர்கள் மூலமாக சொத்து கிடைக்கும்.வியாழக்கிழமைகளில் ஸாய் பாபாவை வணங்கி வர நன்மையான பலன்கள் உண்டாகும்.ராசிஅதியதியான சுக்கிரபகவானை வெள்ளிக்கிழமை காலை 6--7மணி அளவில் சுக்கிரஓரையில்
வெள்ளை தாமரை மொட்டு வைத்து வணங்கிவரவும்.ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதனை வணங்கி வர பணம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும்.
                       நன்றி.

குருப் பெயர்ச்சிப் பலன்கள்: மேஷம்.

வணக்கம்.
மேஷம் :அஸ்வினி,பரணி,கார்த்திகை 1ஆம் பாதத்தில் பிறந்த மேஷராசி நேயர்களே!
விடாமுயற்சியும் ,வைராக்கியமும் கொண்ட உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சோதனைகளில் சாதனை படைக்க வைக்கும்.விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04-10-2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் ,இது வரை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமாகிய 7ஆம் இடத்தில் துலாம் ராசியில்  சஞ்சரித்து வந்த குரு பகவான் அஷ்டம ஸ்தானமாகிய 8ஆம் இடமாகிய விருச்சிக  ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
          குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே அதிக பலம்.குரு பகவானின் 5,7,9 பார்வையைப்  பெறும்  ராசிகள் மீனம், ரிஷபம், கடகம்.குருவின் பார்வை பெறும் ராசிகள் மேஷ ராசிக்கு 12,2,4ஆம் இடமாகும்.
விரய ஸ்தானமான 12ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் நீண்ட தூரப் பயணங்கள் ,ஆன்மீக தொடர்பு போன்றவை ஏற்படும்.
தன ஸ்தானமான 2ஆம் இடத்தை குரு பகவான், 8ஆம்இடமான விருச்சிகத்தில் இருந்து பார்ப்பதால் வங்கியில் சேமிப்பு உயரும்.உறவினர்களிடம் பணம் கொடுப்பதை தவிர்கவும்.
சுக ஸ்தானமான 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் மறை முகமாக வியாதியை ஏற்படுத்தி குணமடையச் செய்வார்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் ,தங்க நகை வாங்குவீர்கள்.
வியாழக்கிழமை ௧ாலை 6--7மணி அளவில் குரு ஓரையில் குரு பகவானுக்கு முல்லை மலர் சாற்றியும்  ,ராசி அதிபதியான முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றியும் வழிபடவும்.
                  நன்றி.


புதன், 26 செப்டம்பர், 2018

குரு ஸ்தலம் ஆலங்குடி .

 வணக்கம்.
 குரு ஸ்தலம் ஆலங்குடி .
              குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள் மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்களம் செல்லும் சாலையில் 18கிமீ தொலைவில் உள்ளது.இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை காலை 6-7மணிக்குள் வரும் குரு ஓரையில் சென்று வழிபடலாம்.குரு பகவானுக்கு முல்லை மலர்  வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.வெள்ளை நிறத்தில் உள்ள கொண்டைக்கடலை தானம் கொடுக்க  வேண்டும்.இனிப்பு பலகாரத்தை குரு பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.குரு பகவானின் அருள் பெறுவதற்கு அவரின் வாகனமான யானைக்கு கரும்பு கொடுக்க நல்ல பலன்கள்  நடைபெறும்.
                                        நன்றி.
          

குரு பகவானின் பார்வையால் சிறப்பு அடையும் ராசிகள் .

வணக்கம்.
குரு பகவானின் பார்வையால் சிறப்பு அடையும் ராசிகள்.
வாக்கிய பஞ்சாங்கப்படி விளம்பி வருடம் (4-10-2018)புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை  அன்று இரவு 10.05மணி அளவில் குரு பகவான் துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
குரு பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனது 5வது பார்வையால் சிறப்பு அடையும்  ராசி மீனம் ,7வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி ரிஷபம்,9வது பார்வையால்  சிறப்பு அடையும் ராசி கடகம்.மேலும் துலாம் ராசிக்கு 2-ம்இடத்திற்கு குரு செல்வதால் துலாம் ராசியும்,மகர ராசிக்கு 11-ம்இடத்திற்கு குரு செல்வதால் மகர ராசியும் சிறப்பு அடைகின்றது.
                                             நன்றி.


திங்கள், 24 செப்டம்பர், 2018

திதிகளினால் சூனியம் அடையும் ராசி அதிபதிகள்.

வணக்கம்.
திதிகள்
1.பிரதமை.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் துலாம் ,மகரம்  இவற்றின் அதிபதிகள் சுக்கிரன்,
2.துதியை.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் தனுசு, மீனம் இவற்றின் அதிபதி குரு .
3.திருதியை .
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் மகரம்,சிம்மம் இவற்றின் அதிபதிகள் சனி,சூரியன்.
4.சதுர்த்தி .
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் கும்பம், ரிஷபம் இவற்றின் அதிபதிகள் சனி,சுக்கிரன் .
5.பஞ்சமி.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் மிதுனம், கன்னி இவற்றின்
அதிபதி புதன்.
6.சஷ்டி.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் மேஷம்,,சிம்மம் இவற்றின் அதிபதிகள் செவ்வாய்,சூரியன் .
7.அடைவதில
 இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் தனுசு, கடகம் இவற்றின்
அதிபதிகள் குரு, சந்திரன் .
8.அஷ்டமி.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் மிதுனம், கன்னி இவற்றின் அதிபதி புதன்.
9.நவமி.
 இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் சிம்மம், விருச்சிகம் இவற்றின் அதிபதிகள் சூரியன், செவ்வாய்.
10.தசமி.
இந்த தீனியினால் சூனியம் அடையும் ராசிகள் சிம்மம், விருச்சிகம் இவற்றின் அதிபதிகள் சூரியன், செவ்வாய்.
11.ஏகாதசி.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் தனுசு, மீனம் இவற்றின் அதிபதி குரு .
12.துவாதசி.
இந்த திதியினால் சூனியம் அடையும் ராசிகள் துலாம், மகரம் இவற்றின் அதிபதிகள் சுக்கிரன் ,சனி.
13.திரயோதசி.
இந்த தீனியினால் சூனியம் அடையும் ராசிகள் ரிஷபம், சிம்மம் இவற்றின் அதிபதிகள் சுக்கிரன், சூரியன்.
14.சதுர்த்தசி.
இந்த தீனியினால் சூனியம் அடையும் ராசிகள் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவற்றின் அதிபதிகள் புதன் ,குரு .
15.அமாவாசை,பெளர்ணமி திதிகளுக்கு எந்த ராசிகளும் சூனியம் அடைவதில்லை .மேலே கண்ட திதிகளில் ஒருவர் பிறக்கும் போது சூனியம் அடையும் ராசி அதிபதிகள் லக்கினத்தில்  இருந்து 6,8,12 -ல் மறையும் போது நல்ல பலன்கள் நடைபெறும்.உதாரணமாக திரயோதசி திதியில் ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு சூனியம் அடையும் ராசி அதிபதிகள் சுக்கிரன், சூரியன் லக்கினத்தில இருந்து 6,8,12-ல் மறையும் போது அந்த கிரகங்களின் திசை அல்லது புத்திகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.
                                 நன்றி.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

கிரகங்களின் மொழிகள் மற்றும் திசைகள்.

வணக்கம்.
கிரகங்களின் மொழிகள் மற்றும் திசைகள்.
கிரகங்கள். ------------------------மொழிகள்.
1.சூரியன் ---------------------------சமஸ்கிருதம்,தெலுங்கு மொழி.
2.சந்திரன் --------------------------தமிழ் மொழி.
3.செவ்வாய் -----------------------மந்திர மொழி .
4.புதன் --------------------------------ஜோதிடம்.
5.குரு -----------------------------------சமஸ்கிருதம்,தெலுங்கு மொழி
6.சுக்கிரன் --------------------------சமஸ்கிருதம்,தெலுங்கு மொழி.
7.சனி -----------------------------------அன்னிய மொழி.
8.ராகு ----------------------------------அன்னிய மொழி.
9.கேது ---------------------------------அன்னிய மொழி.
கிரகங்கள் ------------------------- திசைகள்.
1.சூரியன் --------------------------மத்திய பகுதி.
2.சந்திரன் --------------------------தென் கிழக்கு.
3.செவ்வாய் -----------------------தெற்கு.
4.புதன் --------------------------------வட கிழக்கு.
5.குரு -----------------------------------வடக்கு.
6.சுக்கிரன் --------------------------கிழக்கு.
7.சனி -----------------------------------மேற்கு.
8.ராகு -----------------------------------தென் மேற்கு.
9.கேது ----------------------------------வட மேற்கு.
                                       நன்றி.

சனி, 22 செப்டம்பர், 2018

செவ்வாய் பகவானின் நண்பர்கள்.

வணக்கம்.
செவ்வாய் பகவானின் நண்பர்கள்.
சூரியன், சந்திரன்,குரு இந்த மூன்று கிரகங்களும் செவ்வாய் பகவானுக்கு நண்பர்கள்.சூரிபனும் சந்திரனும் நட்பு கிரகங்களாக இருப்பதால் கடக ,சிம்ம லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் செவ்வாய் தோஷம் ஏற்படுத்துவதில்லைை.
1.சூரியனின் நட்சத்திரங்கள் :கார்த்திகை,உத்திரம்,உத்தரடம் .
2.சந்திரனின் நட்சத்திரங்கள் :ரோகிணி,அஸ்தம்,திருவோணம்.
3.குரு பகவானின் நட்சத்திரங்கள் :புனர்பூசம் ,விசாகம், பூரட்டாதி.
         மேலே கண்ட நட்சத்திரங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் நல்ல பலன்கள் மேற்கண்ட கிரகங்களின் திசை அல்லது புத்தி நடக்கும் போது ஏற்படும்.காரத்திகை,உத்திரம்,உத்தரடம் இந்தநட்சத்திரங்களின் 2ஆம் பாதங்களில் செவ்வாய் பகவான் அம்ச கட்டத்தில் உச்சம் அடைவார்.ரோகிணி,அஸ்தம்,திருவோணம் இந்த நட்சத்திரங்களின் 1ஆம் பாதங்களில் செவ்வாய் பகவான் ஆட்சி நிலையில் இருந்து நன்மையான பலன்களை ஏற்படுத்துவார்.புனர்பூசம் ,விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களின் 1ஆம் பாதங்களில் அம்ச கட்டத்தில் ஆட்சி நிலையில் இருந்து நல்ல பலன்களை ஏற்படுத்துவார்.
செவ்வாய் கிரகத்தின் உக்கிரத்தை அவரின் நட்பு கிரகங்கள் குறைகின்றது.
செவ்வாய் கிரகத்தின் அதி தேவதை முருகப் பெருமானை வணங்கி நற்பேறு அடைவோம்.
                  

வியாழன், 20 செப்டம்பர், 2018

சந்திர பகவானின் நண்பர்கள் .

வணக்கம்.
சந்திர பகவானின் நண்பர்கள் சிம்ம ராசிக்கு அதிபதயான சூரிய பகவான் மற்றும் மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன் பகவான்.  சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும் புதன் பகவானின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதி இவற்றில் சந்திரன் வரும் போது கூடுதலான நன்மைகளை சந்திரபகவான் வழங்குவார்.
            ஜாதகத்தில்  சூரிய திசையில் சந்திர புத்தி அல்லது சந்திர திசையில் சூரிய புத்தி நடை பெறும் போது நன்மையான பலன்கள் நடைபெறும்.இதே போல் புதன் திசையில் சந்திர புத்தி அல்லது சந்திர திசையில் புதன் புத்தி நடக்கும் போது நல்ல பலன்கள் நடைபெறும்.சூரியன் மற்றும் புதன் காரகங்களை  சந்திர பகவான் ஆதிக்கத்திற்க்கு கட்டுப்பட்டு நடைபெறும். சூரியன் ,புதன்  சாரங்களில் சந்திரன் இருப்பது , ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானின் நட்சத்திரங்களாக  இருப்பது மற்றும் புதன் கிழமைகளில் புதன் பகவானின் நட்சத்திரங்களாக இருப்பது இன்னும் அதிக நன்மைகளை ஏற்படுத்தி தரும்.
     ௦௦. 


              .                                                            

புதன், 19 செப்டம்பர், 2018

கிரகங்களும் நவரத்தினங்களும் .

வணக்கம்.
கிரகங்கவரத்தினங்களும்.
  1,10,19,28 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ,சூரிய பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மாணிக்கம்.
2,11,20,29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள், சந்திர பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் முத்து.
3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் ,குரு பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தனுசு, மீனம் ராசிகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கனக புஷ்பராகம்.
4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள், ராகு பகவானின் ஆதிக்கத்தில்  உள்ள வர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கோமேதகம்.
5,14,23 தேதிகளில் பிறந்தவர்கள், புதன் பகவானின் ஆதிக்கத்தில் உள்ள வர்கள் மற்றும் மிதுனம், கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் மரகதப்பச்சை.
6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் ,சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் உள்ள வர்கள் மற்றும் ரிசபம்,துலாம் ராசிகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைரம்.
7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,கேது பகவானின்  ஆதிக்கத்தில் உள்ளவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைடூரியம்.
8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் மகரம், கும்பம் ராசிகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் நீலம்.
9,18,27 தேதிகளில் பிறந்தவர்கள், செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் மேசம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் பவழம்.
                           நனறி.

நன்மை தரும் கேது காலம்.

வணக்கம்.
 நன்மை தரும் கேது காலம்.
ராகு காலம் அணைவருக்கும் தெரியும் அது என்ன கேது காலம் சிந்திக்க வைக்கிறதா?ராகு  பகவான் தினசரி 1மணி 30நிமிடங்களை தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளார்.  ஜாதகத்தில் ராகு பகவான் இருக்கும் ராசியில் இருந்து 7வது ராசியில் கேது பகவான் இருப்பார். சரியாக 180 டிகிரியில் ராகு, கேது கிரகங்கள் இருக்கும்.
1.ஞாயிறு ----காலை (10.30-மணி முதல் 12.00 மணி வரை ).
2. திங்கள்---- மதியம்(01.30-மணி முதல்  03.00 மணி வரை).
3. செவ்வாய் --காலை(09.00மணி முதல் 10.30 மணி வரை).
4.புதன் ----காலை(06.00மணி முதல் 7.30 மணி வரை).
5.வியாழன் ---காலை (07.30மணி முதல் 9.00மணி வரை).
6.வெள்ளி ---மாலை(04.30மணி முதல்  6.00மணி வரை ).
7.சனி -----மாலை (03.00 மணி 4.30மணி வரை).
கெளரி பஞ்சாங்கத்தில் கேது காலம் நன்மை செய்யுமா என சரி பாருங்கள்.
1 .ஞாயிறு காலை10.30__12.00 லாபம்.
2.திங்கள் மதியம் 01.30---3.00 சுகம்.
3.செவ்வாய்  காலை 09 .00--10.30 தனம்.
4. புதன் காலை(6.00---7.30)  லாபம்.
5. வியாழன் காலை 7.30--9.00) சுகம்.
6.வெள்ளி மாலை 4.30--6.00)தனம்.
7.சனி ---மாலை (3.00--4.30) தனம்
தினசரி வரும் கேது  காலங்களில் விநாயகரை வணங்கி நீண்ட நாட்கள் நடைபெறாமல் இருந்த செயலை தொடங்குங்கள் நன்மை உண்டாகும். 
                                                                       நன்றி .

சூரிய பகவானின் நண்பர்கள்.

வணக்கம்.
சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய பகவானுக்கு நண்பர்களாக உள்ள கிரகங்கள்  கடக ராசிக்கு  அதிபதியான சந்திர பகவான் ,விருச்சிகம் மற்றும் மேசராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ,தனுசு மற்றும் மீனம் ராசிக்கு அதிபதியான குரு பகவான்.
சந்திர பகவானின் நட்சத்திரங்கள் :ரோகிணி,அஸ்தம்,  திருவோணம்.  செவ்வாய் பகவானின் நட்சத்திரங்கள் :மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
குரு பகவானின் நட்சத்திரங்கள் :புனர்பூசம் ,விசாகம், பூரட்டாதி.
           ஒருவர் ஜாதகத்தில் சூரிய பகவான் மேலே குறிப்பிட்ட நட்பு கிரகங்களின் சாரத்தில் இருக்கும் போது அந்த ஜாதகருக்கு நல்ல பலன்கள் நடக்கிறது. கோச்சாரத்தில் சூரிய பகவான் நட்பு கிரகங்களை கடக்கும் போது நல்ல பலன்களை நடத்திவைக்கும்.
         உதாரணமாக சூரிய பகவான் புரட்டாசி மாதம் கன்னி ராசியில் இருப்பார். கன்னி ராசியில் சூரியனின் சாரத்தில் உள்ள உத்திர நட்சத்திரம்,சந்திரனின் சாரத்தில் உள்ள அஸ்தம் நட்சத்திரம், செவ்வாயின் சாரத்தில் உள்ள சித்திரை நட்சத்திரம் போன்றவை உள்ளது. சூரிய திசை அல்லது புத்தி நடக்கும் போது நட்பு கிரகங்களின் சாரத்தை சூரியன் கடக்கும் போது நல்ல பலன்கள் கிடைக்கும். சந்திரன், செவ்வாய், குரு இந்த கிரகங்களின் காரகங்கள்  சூரிய பகவானால் விருத்தி அடையும். லக்னத்திற்க்கு 6,8,12-ஆம் இடங்களில் சந்திரன்,
செவ்வாய், குரு கிரகங்கள் மறைந்தாலும் சூரிய பகவானால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
                                                                     நன்றி 

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

ஐஸ்வர்யங்கள் தரும் ஸ்ரீ ஷீர்டி ஸாயிபாபா.

வணக்கம்.
ஐஸ்வர்யங்கள் தரும் ஸ்ரீஷீரிடி ஸாயிபாபா.
வியாழக்கிழமைகளில் ஸாயிபாபா ஆலயம் சென்று வழிபடுங்கள்.
வியாழக்கிழமைகளில் ஸாயிபாபாவை நினைத்து  விரதம் இருங்கள்.
ஒம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத் 

காலை அல்லது மாலை வேளைகளில் ஸாய் பாபாவை வணங்க வேண்டும் .
இந்த வியாழக்கிழமை விரதத்தில் பழங்கள், பால் ,இனிப்புகள் முதலியவைகளை வைத்து வணங்க வேண்டும். முக்கியமாக பொய் சொல்லக்கூடாது. ஸாய் நாதனுக்கு பொய் சொல்பவ்களைப் பிடிக்காது.
அடுத்தவர்கள் சொத்தை அபகரிப்பவர்களை ஸாய் பாபா நேரம் பார்த்து தண்டனை வழங்குவார். ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் வஸ்த்திரம் விரித்து அதன் மேல் ஸாய் பாபா படம் வைத்து தூய நீரால் படத்தை துணியால் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். ஸாய் பாபா காயத்திரி சொல்லி பழங்கள், கற்கண்டு, தேன்,  திராட்சை ,பொரி கடலை, அவல் எதுவேண்டுமானாலும் நைவேத்தியம் செய்து பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாது.
ஊதுபத்தி,தீபம் ஏற்றி வழிபடவும். ஒரே கோரிக்கையை மனதில் நினைத்து 9 வாரங்கள் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வேண்டுதல் செய்ய நன்மை 
உண்டாகும். 
சாய் பாபாவை வணங்கவேண்டும். 

காயத்திரி தேவியின் வடிவம்.

வணக்கம்.
காயத்திரி தேவியின் வடிவம்.
அருள் வழங்கும் முகம் -5
அருள் கொடுக்கும் கைகள் -10
1.முத்தைப்போல் ஒளிரும் முகம்.
2. பவழம் போல் பிரகாசிக்கும் முகம்.
3. போராளி பரப்பும் தங்க முகம் .
4. நீல வானத்தைப் போன்ற முகம் .
5. தூய்மையான வெள்ளை முகம்.
சங்கு, சக்கரம், கபாலம்,
கதை, அங்குசம், தாமரை
ஆகியவற்றை ஏந்திய கைகள் பத்து .
சூரிய பகவானுக்கும்,  சந்திர பகவானுக்கும் ஒளியை கொடுத்கொடுத்தார்,
அன்னை காயத்திரி தேவி அதனால் சந்திரப்பிறையை அணிந்து இருக்கிறாள்.
எல்லா நிறத்திற்க்கும் ஆதாரமான நிறமான  வெள்ளை நிறத்தை தேர்ந்தெடுத்து வெள்ளை தாமரையில் வீற்றிருக்கிறாள்.
அன்னை அணிந்துள்ள ரத்தின கிரீடம் பிணத்தை குறிக்கிறது. முகங்கள் ஐந்தும் பஞ்சபூதங்களை குறிக்கிறது.
        கைகளில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஞானேந்திியம் மற்றும் கர்மேந்திரியத்தை குறிக்கும்.
அன்னையின்  திருஉருவம்,   உள்ளே ஜீவ சக்தியையும் வெளியே காரிய சித்தியயையும் ஒலி அலைகளாக பரப்பிக்கொண்டிருக்கிறாள் .
அன்னை காயத்திரி தேவியை மனதில் நினைத்து நம் குறைகளை அன்னையிடம் ஒப்படைத்து அன்னையின் அருளைப் பெற்று மகிழ்ச்சி அடைவோம். நன்றி. 

ஸப்த மகரிஷிகள் -காயத்திரி மந்திரம்.

வணக்கம்.

 ஸப்த  மகரிஷிகள் -காயத்திரி மந்திரம் .
1 .காஸ்யபர் மகரிஷியின் காயத்திரி மந்திரம்.
       ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
        ஆத்ம யோகாய தீமஹி
.      தந்நோ காஸ்யப :  ப்ரசோதயாத்.
2.அத்ரி மகரிஷியின் காயத்திரி மந்திரம்.
       ஓம் சத்கர்மபலதாய வித்மஹே சதாக்நிஹோத்ராய
.      தீமஹி தந்நோ அத்ரி: ப்ரசோதயாத்.
3.பரத்வாஜர் மகரிஷியின் காயத்திரி மந்திரம்.
       ஓம் தபோரூபாய வித்மஹே சத்ய தர்மாய தீமஹி
.       தந்நோ பரத்வாஜ:  ப்ரசோதயாத்.
4 .விஸ்வாமித்திரர் மகரிஷியின் காயத்திரி மந்திரம்.
      ஓம் தநுர்தராய வித்மஹே ஜடாஜுடாய தீமஹி
.     தந்நோ விஸ்வாமித்ர: ப்ரசோதயாத்.
5.கெளதமர் மகிரிஷியின் காயத்திரி மந்திரம்.
   ஓம் மஹாயோகாய வித்மஹே சர்வபாவநாய தீமஹி
     தந்நோ கெளதமர்: ப்ரசோதயாத்.
6.ஜமதக்னி மகரிஷியின் காயத்திரி மந்திரம்.
      ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே அக்ஷசூத்ராய
.   தீமஹி தந்நோ ஜமதக்னி: ப்ரசோதயாத்.
7.வசிஷ்டர் மகரிஷியின் காயத்திரி மந்திரம்.
   ஓம் வேதாந்தகாய வித்மஹே ப்ரம்ஹசுதாய தீமஹி
.    தந்நோ வசிஷ்ட: ப்ரசோதயாத்.
 ஸப்த மகரிஷிகளின் காயத்திரி மந்திரம் தினசரி 7தடவை சொல்லி வர மகரிஷிகளின் அருள் நமக்கு கிடைக்கும்.
          நன்றி.
               

திங்கள், 17 செப்டம்பர், 2018

கன்னியில் உச்சம் பெறும் புதன் பகவான் .

வணக்கம் .
கன்னியில்  உச்சம் பெறும் புதன் பகவான்.
கல்வி, வேலை ,புகழ் ,வெற்றி, வைத்தியம், தோல், நரம்பு ,மனோதைரியம் ஆகியவற்றிற்கு எல்லாம் அதிபதியாக  விளங்கக்கூடியவர்  புதன் பகவான்.
புரட்டாசி மாதம்  2_  ம் தேதி   முதல்  புரட்டாசி  மாதம்  18 _ம் தேதி வரை (18-9-2018முதல் 4-10-2018வரை )கன்னி ராசியில் இந்த காலகட்டத்தில் உச்சம்அடைகிறார் .
கல்வி, வேலை, புகழ், வெற்றி, மனோதைரியம், தோல், நரம்பு போன்றவைகளில் சிறப்புற்று விளங்க வேண்டும் என்றால் எண்ணம் ,சொல், செயல் அனைத்திலும் தூய்மை பெருகி ,வளமான வாழ்வு பெற சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் புதன் பகவானையும் அங்கு ஸ்தல விருட்சமாய் இருந்து தரணி எல்லாம் நேர்மறை சக்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் நாயுருவியையும் வேண்டி வணங்கி வாருங்கள்.
புதன் கிழமை அதிகாலை 6மணி முதல் 7மணிக்குள் புதன் ஓரையில்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
 என்ற புதன் காயத்திரி மந்திரத்தை 17முறை சொல்லி பச்சை வண்ண வ ஸ்திரம் சாற்றி, நாயுருவி மாலை அணிவித்து, பாசிப்பயறு பரப்பி 17மூலிகை தீபம் ஏற்றி வழிபடவும்.
புதன் பகவான் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாளில் சென்றும் வழிபடலாம்.
                    நன்றி .
 
.   


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மூன்று கண நட்சத்திரங்கள்.

வணக்கம்.
மூன்று கண நட்சத்திரங்கள்.
மனுச கணம், தேவ கணம்,  ராக்ஷஸ கணம் .
மனுச கண நட்சத்திரங்கள். 
1 .பரணி.
2.ரோகிணி.
3. திருவாதிரை.
4.பூரம்.
5.உத்திரம்.
6.பூராடம்.
7.உத்திராடம்.
8.பூரட்டாதி .
9.உத்திரட்டாதி.
தேவ கண நட்சத்திரங்கள்.
1.அஸ்வினி.
2.மிருகசீரிடம்.
3.புனர்பூசம்.
4.பூசம்.
5.அஸ்தம்.
6.சுவாதி .
7.அனுசம்.
8.திருவோணம்.
9.ரேவதி.
ராக்ஷஸ கண நட்சத்திரங்கள்.
1.கார்த்திகை.
2. ஆயில்யம்.
3.மகம்.
4.சித்திரை .
5.விசாகம்.
6.கேட்டை .
7.மூலம்.
8.அவிட்டம் .
9.சதயம்.
பெண் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்திருந்தால் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்த ஆண்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.
ஆண் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்திருந்தால்,  மனுச  கண ,தேவ கண மற்றும் ராக்ஷஸ கண நட்சத்திரங்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும். ஆண் ராக்ஷஸ கணம் என்றால் மூன்று கணங்களை சேர்ந்த பெண் களும்  பொருந்தும்.
                                                  நன்றி .



வியாழன், 13 செப்டம்பர், 2018

நட்சத்திரங்களின்படி அலங்காரம்__ ஈச்சனாரி விநாயகர் .

வணக்கம்.
ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில்
கோயமுத்தூர் அருகில் ஈச்சனாரி என்னும் இடத்தில் உள்ளது .
இந்த கோவிலில்  உள்ள விநாயகர் சிலை  5அடி உயரமும் 3அடி பருமனும்  கொண்ட  பிரமாண்டமான  அமைப்பில்  உள்ளது. அஸ்வினி நட்சத்திரமுதல் ரேவதி நட்சத்திரம் வரை தினசரி புது விதமான அலங்காரத்தில்  விநாயகருக்கு பூஜை நடை பெறுவது  இந்த கோவிலின் சிறப்பாகும்.
குழந்தைகளின் .படிபபு, உத்தியோகத்தில் உயர்வு நிலையை அடைய, தொழில் விருத்தி அடைய இந்த விநாயகரிடம் வேண்டதல் வைக்கும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த கோவிலில் உள்ள விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் சாற்றுதல் ,பாலாபிஷேகம் செய்தல் ,சதுர்த்தி விரதம் இருத்தல் சிதறுகாய்  உடைத்தல் நேர்த்திக்கடனாக  செய்கிறார்கள்
.                                                                     நன்றி .

மணக்குள விநாயகர் .

வணக்கம்.
புதுச்சேரி அருள்மிகு
ஸ்ரீ மணக்குள விநாயகர்
கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.
கோவில் உட்புறசுவர்களில் செதுக்கப்பட்ட  விநாயகர் சிற்பங்களும் மற்றும் படங்களும்  உள்ளது. இந்த  சிற்பங்கள் அவரின் அவதாரங்களை பிரதிபளிக்கிறது. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் வழிபடும் தெய்வம் மணக்குள விநாயகர். விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகறது .

நன்றி .


செவ்வாய், 11 செப்டம்பர், 2018

விக்கினங்களை போக்கும் விநாயகர்.

வணக்கம்.
விக்கினங்களை போக்கும் விநாயகர் வழிபாடு. சனி கிரகத்தால் ஏற்பட்ட துன்பங்கள் விநாயகரை வணங்கும் போது சூரியனைக் கண்ட பனி போல நீங்கிவிடும். இந்து மக்கள் அனைவரும் விரும்பிக் கொண்டாடும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி.
நீண்ட நாட்களாக தடங்களாக உள்ள செயல்களை விநாயகர் சதுர்த்தி அன்று மாம்பழம் மற்றும் நாவல் பழங்களை வைத்து வழிபட்டு கோவில் வாசலில் உள்ள யானைக்கு கரும்பு கொடுத்து வேண்டுதல் செய்ய நன்மையான பலன்கள் உண்டாகும் .

வெற்றி தரும் வெற்றிலை விநாயகர் .

வணக்கம்.
வெற்றி தரும் வெற்றிலை விநாயகர்.
படம் வரைவது எப்படி என்று இந்த வீடியோவில் பாருங்கள்.
விநாயகரை மாதுளை இலைகளால்  அர்ச்சனை செய்து நல்ல பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

திங்கள், 10 செப்டம்பர், 2018

விநாயகர் வழிபாட்டால் கிடைக்கக் கூடிய 21 பேறுகள்.

வணக்கம்.
விநாயகர் வழிபாட்டால்கிடைக்கக் கூடிய 21 பேறுகள்.
ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகறது.
விநாயகர் சதுர்த்தி அன்று  களிமண்ணால்  செய்யப்பட்ட விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி,கொழுக்கட்டை, விளாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம், பேரிக்காய், நாவல் பழம் வைத்து வணங்க வேண்டும்.
விநாயகருக்கு படித்த  வெள்ளை எருக்கன் பூ மாலை மற்றும் அருகன் புல் மாலை போட்டு வழிபடவேண்டும். இவ்வாறு வழிபடுவதால் 21பேறுகள் கிசைக்கும்.
1. கல்வி 2 . செல்வம் 3 . வீரம் 4 .இன்பம் 5 .தர்மம் 6 .செளபாக்கியம் 7 . நல்ல குடும்பம் 8.நல்வாழ்வு கூடிய மோட்சம்  9.நல்ல சந்தான  பிராப்த்தி .9. நுண்ணறிவு 10. நற் புகழ் 11.சந்தோசமான செயல்கள் 12 .அசுபங்களை நீக்குதல் 13.வாக்கு சித்தி 14. சாந்தம் 15 .பில்லி சூனியம் நீக்குதல் 16.முக வசீகரம் 17.வெற்றி 18.எல்லோரிடமும் அன்பு பெறுதல் 19.அடக்கம் 20. பொருள் 21 .பெருந்தன்மை  போன்ற அணைத்து நன்மைகளும் கிடைக்கும்.
                                       நன்றி .

ஆரோகண ரஜ்ஜு --அவரோகண ரஜ்ஜு .

வணக்கம்.
ஆரோகண ரஜ்ஜு நட்சத்திரங்கள் .
1.அஸ்வினி,மகம், மூலம் .
2. பரணி, பூரம் ,பூராடம் .
3. காராத்திகை, உத்திரம், உத்திராடம்.
4.ரோகினி ,அஸ்த்தம், திருவோணம்.
அவரோகண  நட்சத்திரங்கள்.
1.ஆயில்யம்,கேட்டை, ரேவதி .
2.பூசம், அனுசம், உத்திரட்டாதி.
3.புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி.
4.திருவாதிரை,சுவாதி, சதயம்.
சிரசு   ரஜ்ஜு நட்சத்திரங்கள்.
1. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
  ஆரோகண வகையை சார்த்த நட்சத்திரங்களில்  பிறந்த பெண் ஜாதகருக்கு ,ஆரோகண வகையை  சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண் ஜாதகரை    திருமணம் செய்ய வேண்டும்.
 ஆரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதகருக்கு
அவரோகண வகையை சார்ந்த  நட்சத்திரங்களில் பிறந்த ஆண் ஜாதகரை
திருமணம் செய்ய வேண்டும். .
அவரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதககர் ,அவரோகண வகையை சார்ந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண் ஜாதகரை திருமணம் செய்ய க்கூடாது.
  சிரசு வகையை சார்ந்த பெண் அதே சிரசு வகையை சார்த்த ஆண் ஜாதகரை திருமணம் செய்ய க்கூடாது .
                                    நன்றி .
     

V. Í. Pஆக மாற்றும் தர்மகர்மாதிபதி யோகம்.

வணக்கம்.
V. I. P ஆக மாற்றும் தர்மகர்மாதிபதி யோகம்.
                   ஜாதகத்தில் லக்னத்தில்  இருந்து 9,10ஆம் வீட்டிற்கு  அதிபதியான  கிரகங்கள் இணைந்து இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். உதாரணமாக தனுசு லக்னத்திற்கு 9,10ஆம் வீட்டிற்கு அதிபதியான  கிரகங்கள் சூரியன், புதன் இந்த  இரண்டு கிரகங்கள் இணைந்து 9வது வீடாகிய  சிம்மத்தில்  அல்லது 10வது  வீடாகிய கன்னி ராசியில் இருந்தால் இந்த யோகம் செயல்படும். தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற கிரகங்கள் லக்னத்திற்கு 6,8,12 என்ற மறைவு ஸ்தானங்களில் இணைந்து இருந்தால் இந்த யோகம் செயல்படாது. இந்த யோகத்தை பெற்றவர்கள் ஆன்மீகத்தினால் புகழ் அடைவார்கள். சொந்தமாக கோவில் கட்டுவார்கள் அல்லது அறச்சாலையை நிர்வாகம் செய்து V. I. P ஆக பிரபலமாவார்கள். 9 ஆம் அதிபதி அல்லது 10 ஆம் அதிபதி திசை அல்லது புத்தி நடைமுறையில் இருக்க வேண்டும்.         
                         நன்றி .

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

பீனிக்ஸ் --புனித தீ பறவை.

வணக்கம்.
பீனிக்ஸ் -புனித தீ பறவை.கெட்ட செயல்களை அழித்து நல்ல செயல்களாக  மாற்றும் நெருப்பு பறவை வரைவது  எப்படி என்று வீடியோவில்  பாருங்கள். 

ஆண்கிழமை பிங்கலை, பெண் கிழமை இடகலை .

வணக்கம்.
  ஆண் கிழமைகள் -ஞாயிற்றுக் கிழமை ,செவ்வாய் கிழமை ,வியாழக்கிழமை ,சனிக்கிழமை .
பெண் கிழமை கள்- திங்கட்கிழமை ,புதன் கிழமை, வெள்ளிக்கிழமை.
  பிங்கலை என்பது வலது பக்கம் நாசியில் மூச்சு ஒட்டம் ஏற்படுதை  பற்றி சொல்வதாகும்.  இடகலை என்பது இடது பக்கம் நாசியில் மூச்சு ஒட்டம் ஏற்படுதை பற்றி சொல்வதாகும்.
              தினசரி சூரிய உதயம் ஆகும் போது ஆண் கிழமைகளில் மனிதர்களுக்கு வலது பக்க நாசியில் மூச்சு ஒட்டம் ஏற்பட வேண்டும் ,.பெண கிழமைகளில் இடது பக்க நாசியில் மூச்சு ஒட்டம் ஏற்பட வேண்டும்.
          மாற்றமாக  ஆண் கிழமைகளில் இடது பக்க நாசியில், பெண் கிழமைகளில் வலது பக்க நாசியில்  மூச்சு ஒட்டம் ஏற்பட்டால் நோய் ஏற்படப் பேசுகிறது என்று அர்த்தம் .சூரிய உதயத்தில் இருந்து 5 நாழிகைக்கு ஒரு முறை மூச்சு ஒட்டம் மாறி கொண்டே இருக்கும். (ஒரு  மணி நேரம் என்பது 2 1/2 நாழிகை).
மூச்சு ஒட்டம் மாறி நடந்தால் மூச்சு பயிற்சியினால் நோய் ஏற்பட்டதை சரி செய்யலாம்.
             நன்றி.
               
           
               

சனி, 8 செப்டம்பர், 2018

இஞ்சினியரிங் படிப்பு யாருக்கு?

வணக்கம்.இஞ்சினியரிங் படிப்பு யாருக்கு?
ஒருவருடைய ஜாதகத்தில் 4வது வீட்டில் செவ்வாய் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால்  இஞ்சினியரிங் (பொறியாளர் ) படிபபு வரும்.  .செவ்வாய் பகவான் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவற்றில் புதன் பகவான் இருந்தால் அல்லது புதன் பகவான் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி இவற்றில் செவ்வாய் பகவான் இருந்தால் இஞ்சினியரிங்  கல்வி அமையும்.
           4வது வீட்டில் செவ்வாய் பகவான் இருந்து அந்த செவ்வாய் கிரகத்தை குரு பகவான் 5 அல்லது 7அல்லது ,9_ வது பார்வையால்  பார்த்தால் பெறியியல் கல்வி தடையின்றி அமையும். ஏதாவது ஒரு விதத்தில் செவ்வாய் பகவான் தொடர்பு இருக்கும்.
               

பஞ்ச பூதங்களின் கோவில்கள்

வணக்கம்.
 பஞ்ச பூதங்ளின்  கோவில்கள்.
1.நிலம்- பிருதிவி .
2. நீர் - அப்பு .
3. நெருப்பு - தேயு.
4. காற்று - வாயு.
5. அண்டவெளி -ஆகாயம்.
நிலத் தத்துவத்திற்கான கோவில் தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் .
நீர் தத்துவத்திற்கான கோவில் தமிழ்நாடு திருச்சிக்கு அருகில் உள்ள திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம்.
நெருப்பு தத்துவதத்துவத்திற்கான கோவில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம் .
காற்று தத்துவத்திற்கான கோவில் ஆந்திராவில் உள்ள காளகஸ்தீஸ்வரர் ஆலயம்.
ஆகாய தத்துவத்திற்கான கோவில் தமிழ்நாடு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயம் .
                                                            நன்றி. 

பறவைகளில் ஆட்சி செய்யும் நட்சத்திரங்கள்.

வணக்கம்.
1. அஸ்வனி- ராஜாளி .
2. பரணி - காகம்.
3. கார்த்திகை- மயில்.
4.ரோகினி- ஆந்தை .
5. மிருகசீரிடம்-  கோழி.
6. திருவாதிரை- அன்றில்.
7. புனர்பூசம் - அன்னம்.
8. பூசம் -நீர்க்கோழி.
9 .ஆயில்யம் - சிச்சிலி.
10. மகம் - ஆண் கழுகு.
11. பூரம் - பெண் கழுகு .
12. உத்திரம் - கிளுவை.
13. அஸ்த்தம் - பருந்து .
14. சித்திரை - மரங்கொத்தி.
15. சுவாதி - தேனீ. 
16 .விசாகம் -__ குருவி .
17. அனுசம் - வானம்பாடி.
18. கேட்டை - சக்ரவாகம்.
19. மூலம் - போத்து .
20. பூராடம் - கவுதாரி.
21. உத்திராடம் - வலியன்.
22. திருவோணம் - நாரை.
23. அவிட்டம் - வண்டு.
24. சதயம் - காகம் .
25 . பூரட்டாதி- உள்ளான்.
26. உத்திரட்டாதி- ஆந்தை.
27. ரேவதி - வல்லூறு . 
                                   நன்றி .


வெள்ளி, 7 செப்டம்பர், 2018

உலக அளவில் புகழ் பெற செய்யும் பரிவர்த்தனை யோகம் .

வணக்கம்.
உலக அளவில் புகழ் பெற செய்யும் பரிவர்த்தனை யோகம் .
ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் அல்லது மூன்று கிரகங்கள் இடத்தை மாற்றி இருக்கும் போது இந்த யோகம் செயல்படும்.
 உதாரணமாக மிதுனராசிக்கு அதிபதியான புதன் பகவான் விருச்சிகராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மிதுனராசியில் இருந்து,  கிரகங்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றி இருப்பது பரிவர்த்தனை யோகமாகும்.
  இன்னும் ஒரு உதாரணம் முன்னால் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஜாதகத்தில் குரு பகவான், சுக்கிரன் பகவான் இந்த  இரண்டு  கிரகங்கள் தங்கள் இருபபிடங்களை மாற்றி உள்ளது.
 இந்திரா காந்தி அவர்கள் ௧டக லக்னத்தில் பிறந்தவர். கடக லக்னத்திற்கு 6வது வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் ரிசப ராசியில் உள்ளது .ரிசப ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் தனுசு ராசியில் உள்ளது. லக்னாதிபதியான சந்திர பகவான் மகர ராசியில் உள்ளது, மகர ராசிக்கு அதிபதியான சனி பகவான் கடக ராசியில் தங்கள் இருப்பிடங்களை கிரகங்கள் மாற்றி அமைத்து உள்ளது.  இவர் ஜாதகத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியன் விருச்சிக ராசியில் உள்ளது.
இவ்வாறு கிரகங்கள் இடம்மாற்றி உள்ள ஜாதகர்கள்  கண்டிப்பாக உலக புகழ் பெறுவார்கள்.
                                                                 நன்றி .


வக்ரமடைந்த கிரகங்கள் தரும் பலன்கள்

வணக்கம் .
வக்ரமடைந்த கிரகங்கள் தரும் பலன்கள்.
நவக்கிரகங்களில் சூரியன் ,சந்திரன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ,சனி போன்ற  கிரகங்கள் வக்ரமடைகின்றன.
செவ்வாய், சனி, குரு போன்ற கிரகங்கள் இருக்கும் வீட்டிற்கு 5வது வீட்டிற்கு சூரியன் வரும் போது சனி, செவ்வாய், குரு கிரகங்கள் வக்ரம் அடைகின்றன.
7வது வீட்டிற்கு சூரியன் வரும் போது அதிக வக்ரம் அடைகின்றது.
9வது வீட்டிற்கு வரும் போது வக்ரம் நிவர்த்தி அடைகின்றது .
உச்சம் பெற்ற கிரகங்கள் வக்ரம் அடைந்தால் நல்ல பலனுக்கு பதிலாக தீய பலன்களை கொடுக்கின்றன.
   நீச்சம் அடைந்த கிரகங்கள் வக்ரம் அடைந்தால் தீய பலனுக்கு பதிலாக நல்ல பலன்களை கொடுக்கின்றன .
ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்திருந்தால் அந்த நபர்கள் பிடிவாதம் உள்ளவர்கள்  .மருத்துவத்துறை,விஞ்ஞானத் துறையில் சாதனை படைத்தவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்த நிலையில் இருக்கும்.
          ஜாதகத்தில் புதன் வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் தனக்குத்தானே சிந்தனை செய்து கொண்டு இருப்பார்கள். புதன் நீச்சம்அடைந்து வக்ரம் அடைந்தவர்கள் கணித துறையில் சாதனை படைப்பார்கள்.
           ஜாதகத்தில் குரு வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் யாரும் செய்யமுடியாத காரியங்களை சுலபமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்களின் ஆற்றல்களை இவர்கள் பயன்படுத்துவார்கள்.
             ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் அதிகமாக உல்லாசமாக பொழுதைக்களிப்பார்கள். அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்க்கை நடத்துவார்கள்.
           ஜாதகத்தில்  சனி கிரகம் வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் தனித்து வாழ்வார்கள், வெக்கப்படுவார்கள். காரியங்களை  சாதிப்பதில் தயக்கம் இருக்கும்.                                                                                 நன்றி.



வியாழன், 6 செப்டம்பர், 2018

30வயதிற்கு மேல் யோகம் செய்யும் கிரகமாலிகா.

   வணக்கம்.
30 வயதிற்குமேல் யோகம் செய்யும் கிரகமாலிகா .
ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து தொடர்ந்து கிரகங்கள் வரிசையாக இருந்தால் இந்த யோகம் செயல்படும் . இந்த யோகம் பெற்றவர்கள் 30வயது காலம் வரை தரித்திர வாழ்க்கையும் ,30வயதிற்கு மேல் கார், பங்களா என வசதியான வாழ்க்கையும் வாழ்வார்கள்.
சமுதாயத்தில் நல்ல மதிப்பும்,  மரியாதையும் கிடைக்கும். லக்கினத்திற்கு முன்பாக 6ராசிகளில் அல்லது பின்பாக  6 ராசிகளில் கிரகங்கள் அமைய வேண்டும்.திடீர் வசதிவாய்ப்பை  பார்த்து அடுத்தவர்கள் ஆச்சரியம் அடைவார்கள் .




கோடீஸ்வரனாகும் யோகம் யாருக்கு?

வணக்கம் .
கோடீஸ்வரனாகும் யோகம் யாருக்கு?
ஜாதகத்தில் 6,8,12ஆம் வீட்டிற்குஅதிபதிகள் எந்த கிரகம் என பார்த்து அந்த வீட்டிற்கு அதிபதி யான கிரகங்கள் வேறு வீட்டில் மறைந்து இருக்க வேண்டும்.
 உதாரணமாக  மீன லக்கினத்திற்கு  6,8,12ஆம் வீட்டிற்கு அதிபதியான கிரகங்கள் சூரியன், சுக்கிரன், சனி இநத கிரகத்தில்  8ஆம் வீட்டிற்கு அதிபதி யான சுக்கிர பகவான் 12வது வீடான கும்பத்தில் இருந்து 12வது வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 6வது வீடான சிம்மத்தில் இருந்தாலோ  அல்லது 6வதுஅதிபதியான சூரிய பகவான் 8வுது வீடான துலாமில்  இருந்தாலோ கோடீஸ்வரனாகும் யோகம் ஏற்ப்படுகிறது.
தனஸ்தானத்திற்கு அதிபதி மற்றும் பாக்கியஸ்தானத்திற்கு அதிபதி (2,9ஆம் வீட்டிற்கு அதிபதி )உச்சம் பெற்று இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது  வீட்டிற்கு அதிபதியான கிரகம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான  கிரகம் உச்சம் அடைய வேண்டும் .கட்டுக்கட்டாக பணம் கிடைக்க செய்யும் கிரகம் சுக்கிர பகவான் .

சினிமா துறையில் பிரகாசிக்கவைக்கும் கிரகங்கள்.

வணக்கம் .
 சினிமா துறையில் பிரகாசிக்கவைக்கும் கிரகங்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் மற்றும் புதன் பகவான் நல்ல நிலை யில் அதாவது ஆட்சி அல்லது உச்சம் அடைந்த நிலையில் இருந்தால் கண்டிப்பாக சினிமா துறையில் சாதனை படைப்பார்கள்.
சுக்கிர பகவான்  உடன் ராகு பகவான் இணைந்து இருந்தால் கேமராமேனாக ஜெயிக்க வைக்கும் .
வித்தைகளுக்கு காரணமாகிய புதன் பகவான் மற்றும் சுக்கிர பகவான் இணைந்து இருக்கும் போது சினிமா நடிகராக ஜெயிக்க வைக்கும் .
சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் ராகு பகவான்
ஜாதகத்தில்  லக்கினத்தில்  இருந்து  2,7,10 எந்தவிதத்திலாவது தொடர்பு இருக்க வேண்டும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜாதகத்தில் சிம்ம லக்கினத்திற்கு 5வது வீட்டில் தனுசு ராசியில் சுக்கிர பகவான் மற்றும் புதன் பகவான் இணைந்து உள்ளது .
 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஜாதகத்தில் கும்ப லக்கினத்திற்கு
9வது வீட்டில் சுக்கிர பகவான் மற்றும் புதன் பகவான் இணைந்து உள்ளது .
இந்தி  நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள் ஜாதகத்தில் கன்னி ராசியில் சுக்கிர பகவான் நீசம் அடைந்து அந்த வீட்டிற்கு அதிபதியான  புதன் பகவான் உச்சம் அடைந்து நீசபங்க ராஜயோகத்தால் இந்தி பட உலகில் ஜெயிக்க வைத்தது.

மரங்களில் ஆட்சி செய்யும் நட்சத்திரங்கள்.

வணக்கம்.
மரங்களில் ஆட்சி செய்யும் நட்சத்திரங்கள்.
நட்சத்திரங்கள்.                             மரங்கள் .
1. அஸ்வின் நட்சத்திரம் ☎எட்டி மரம்.
2.பரணி நட்சத்திரம்.        🎊நெல்லி மரம்.
3.காராத்திகை நட்சத்திரம்🎍அத்தி மரம்.
4.ரோகிணி நட்சத்திரம்🎉நாவல் மரம்.
5.மிருகசீரிடம் நட்சத்திரம்🎇கருங்காலி மரம் .
6.திருவாதிரை நட்சத்திரம்🎃செங்கருங்காலி மரம்.
7.புனர்பூசம் நட்சத்திரம்🎏மூங்கில்  மரம் .
8.பூசம் நட்சத்திரம்📱அரச மரம்.
9.ஆயில்யம் நட்சத்திரம்🎈புன்னை மரம் .
10.மகம் நட்சத்திரம்🎀 ஆல மரம்.
11. பூரம் நட்சத்திரம்☎பலா மரம் .
12.உத்திரம் நட்சத்திரம் 📱இத்தி மரம்  .
13. அர்த்தம் நட்சத்திரம்🎇அத்தி மரம் .
14.சித்திரை நட்சத்திரம்🎋வில்வம் மரம் .
15.சுவாதி நட்சத்திரம்🎁மருத மரம் .
16.விசாகம் நட்சத்திரம்🎌விளா மரம் .
17. அனுஷம் நட்சத்திரம்🎃மகிழ மரம்  .
18.., கேட்டை நட்சத்திரம்🎂பிராய் மரம்.
19.மூலம் நட்சத்திரம்📞மா மரம்.
20. பூராடம் நட்சத்திரம்🎐வஞ்சி மரம் .
21.உத்திராடம் நட்சத்திரம்🍥பலா மரம் .
22.திருவோணம் நட்சத்திரம்🚹எருக்கு செடி.
23.அவிட்டம்  நட்சத்திரம்🚩வன்னி மரம் .
24.சதயம் நட்சத்திரம்🆕கடம்ப மரம் .
25.பூரட்டாதி  நட்சத்திரம்🚼தேக்கு மரம் .
26.உத்திரட்டாதி நட்சத்திரம்♻வேப்ப மரம் .
27.ரேவதி நட்சத்திரம்🆕இலுப்பை மரம் .

புதன், 5 செப்டம்பர், 2018

தனித்தன்மை தரும் கஜகேசரி யோகம் .

வணக்கம்.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 1,4,7,10வது வீட்டில் குரு பகவான் இருந்தால் கஜகேசரி யோகம் என்று சொல்வார்கள்.
குருவும், சந்திரனும் ஆட்சி நிலையில் இருந்தால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.
                 கஜம் என்றால்  யானை, கேசரி என்றால் சிங்கம்.   பல யானைகளுக்கு மத்தியில் ஒரு  சிங்கம் போல இந்த யோகம் செயல்படும். அந்த அளவு வலிமை உள்ளது இந்த யோகம்.
இந்த யோகம் பெற்றவர்கள் தனித்தன்மையுடன் இருப்பார்கள்.  வீடு, செல்வம், செல்வாக்கு, உயர்ந்த பதவி, தலைமை தாங்கும் செயல், மேடையில் பேசும் ஆற்றல், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவைகளை ஏற்படுத்தும் .
   உதாரணமாக கடகராசியில் சந்திரன் ஆட்சியாக அதே கடகராசியில் குரு உச்சம் இது கஜகேசரி யோகம். மீனம் ராசியில் சந்திரன் இதற்கு 10வது வீட்டில் தனுசு ராசியில் குரு ஆட்சி இதுவும் கஜகேசரி யோகம் தான் .

உபய லக்னம்--- பாதகாதிபதி தரும் பலன்

வணக்கம்.
உபய லக்னம்🎏  மிதுனம், கன்னி, தனுசு, மீனம் .
மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி குரு பகவான் .
கன்னி லக்கினத்திற்கு பாதகாதிபதி  குரு  பகவான்.
 தனுசு லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன்  பகவான்.
 மீனம்  லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன் பகவான்.
பாதகம் செய்யும் கிரகங்களின் திசை அல்லது புத்தி நடக்கும் போது கெடுதியான பலன்கள் நடைபெறுகிறது.
பாதகம் செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானமாகிய 6,8,12ஆம் இடங்களில் இருந்து திசை அல்லது புத்தி நடக்கும் போது நல்ல பலன்களை நடை பெறச்செய்யும்.
பாதகத்தை செய்யும் கிரகங்கள் நீசம் அடையும் போது நல்ல பலன்களை நடை பெறச்செய்யும்.
மிதுனம், கன்னி லக்கினத்தின் பாதகாதிபதி குரு பகவானின் திசை அல்லது புத்தி நடக்கும் போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கிவர நன்மையான பலன்கள் நடைபெறும்.
தனுசு, மீனம் லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன் பகவானின் திசை அல்லது புத்தி நடக்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று வணங்கிவர
நன்மையான பலன்கள் நடைபெறும்.
                                                                                                                                     நன்றி .                 


ஸ்திர லக்னம்---பாதகாதிபதி தரும் பலன்

வணக்கம்.
ஸ்திரலக்னம்☎ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் .
 ரிசப லக்கினத்திற்கு பாதகாதிபதி சனி பகவான்
சிம்ம லக்கினத்திற்கு பாதகாதிபதி செவ்வாய் பகவான். .                                           
விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி சந்திர பகவான் .
கும்ப லக்கினத்திற்கு  பாதகாதிபதி சுக்கிர பகவான் .
   ஒருவர் ஜாதகத்தில் பாதகாதிபதி திசை அல்லது புத்தி நடக்கும் போது பாதகமான செயல்கள் நடை பெறுகிறது.
பாதகம் செய்யும் கிரகங்கள் 6,8,12ஆம் இடங்களில் மறைந்து இருந்து திசை அல்லது புத்தி நடக்கும் போது நல்ல  பலன்கள் நடைபெறும்.
பாதகம் செய்யும் கிரகங்கள் நீசம் அடையும் போது  நல்ல பலன்கள் நடைபெறும்.
 உதாரணமாக கும்பம் லக்கினத்திற்கு பாதகம் செய்யும் கிரகம் சுக்கிர பகவான் இவர் கேந்திர ஸ்தானமான ரிசபம் மற்றும் திரிகோண ஸ்தானமான துலாம்  இவற்றிற்கு அதிபதி எனவே கெடுதியான பலனுக்கு  மாற்றமாக நல்ல  பலன்களை சுக்கிர திசை அல்லது புத்தியில் நடைபெறச்செய்யும்.
                                                                                                                        நன்றி

சர லக்னம் --பாதகாதிபதி தரும் பலன்

வணக்கம். 
சர லக்னம் 💟மேசம், கடகம்,, துலாம், மகரம் .
மேசம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி சனி பகவான்
கடகம்  இந்த லக்கினத்தின் பாதகாதிபதி சுக்கிர பகவான்
துலாம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி சூரிய பகவான்
மகரம் இந்த லக்கினத்தின் பாதகாதிபதி செவ்வாய் பகவான்
சரலக்கினத்திற்கு 11ஆம் வீட்டிற்கு அதிபதி யான கிரகம் பாதகம்செய்கிறது. 
பாதகத்தை செய்யும் கிரகத்தின்திசை அல்லது புத்தி  நடக்கும் போது மட்டுமே பாகத்தை இந்த கிரகங்கள் கொடுக்கின்றன. மற்றபடி பாதகத்தை இந்த கிரகங்கள் கொடுப்பதில்லை. 
              சரலக்கினத்திற்கு பாதகத்தை செய்யும் கிரகங்கள்6,8,12 என்ற மறைவு ஸ்தாபனங்களில் இருக்கும் போது வியக்கத்தக்க நல்ல பலன்களை செய்கின்றன.                                                                                                                                                                                                                                               நன்றி. 

 

நீசபங்க ராஜயோகம்

வணக்கம்!
ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்து அந்த வீட்டிற்கு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் அடைந்திருந்தால் அதற்கு நீசபங்க ராஜ யோகம் என்று பெயர்.
நீசம் அடைந்த கிரகம் அம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம்  பெற்று அமைந்தாலும் இந்த யோகம் செயல்படும் .
1. உதாரணமாக மேசம்  ராசியில் சனி பகவான்  நீசம், அந்த வீட்டிற்கு அதிபதி யான செவ்வாய் பகவான் விருச்சிகத்தில் ஆட்சியாகவோ  அல்லது மகரத்தில் உச்சம் அடைந்தோ  இருந்தால் சனி பகவானின் நீச  பலன் மாற்றம் அடைந்து செவ்வாய் பகவானால்  ஏற்படுகிற நல்ல பலன்களை அடையலாம்.
2.உதாரணமாக  மீனம்  ராசியில் புதன் பகவான் நீசம் ,அந்த வீட்டிற்கு அதிபதி யான குரு பகவான்  கடகத்தில் உச்சம்  அடைந்தோஅல்லது தனுசு ராசியில் ஆட்சி அடைந்தோ இருந்தால் புதன் பகவானின் நீச பலன் மாற்றம் அடைந்து
குரு பகவானால் ஏற்படுகிற நல்ல பலன்களை அடையலாம்.
3 .உதாரணமாக மீனம் ராசியில் நீசம் அடையும் புதன் பகவான் அம்சத்தில் மிதுனம் ராசியில் ஆட்சியாக அல்லது கன்னி  ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் செயல்படும்.
                                   நீசபங்க ராஜ யோகம்  பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, காயசித்தி போன்றவைகளை பெறுவார்கள். சாதாரண நிலையில் இருந்து உயர்ந்தநிலையை அடைவார்கள்.                                                                                                                                                                                                  நன்றி. 




 .
                          

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

ஆன்மீக வாழ்வு தரும் கேது .

வணக்கம்.
"ஆலயம்   தொழுவது   சாலவும் நன்று" என்பது சிறந்த தமிழ்மொழி ஆகும். மனிதனாக  பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக கோவில்கள்    சென்று  இறைவனை  வழிபடவேண்டும். ஆனால்  அது  எல்லாராலும் முடியாத
காரணமகும்.
அப்படி ஒருவர்  கோவிலுக்கு  சென்று  அதிக அளவு  இறைபக்தியுடன்
 இருக்க வேண்டும் என்றாலோ அல்லது   வீட்டில்  பூஜையறையில்
அதிக  நேரம்  வழிபாடு  செய்யக்  கூடியவராகவோ   அல்லது  விரதங்களை
அதிகமாக   கடைபிடித்து   ஆன்மீகப்பணியை   செய்யக் கூடியவராகவோ
இருந்தால்  அவர்களுடைய   ஜாதகத்தில் உள்ள    கேதுவை வைத்து
தான் முடிவு செய்ய வேண்டும்.
 பொதுவாக  கேது திசை  அல்லது  கேது புத்தி   நடப்பவர்கள்  தான்
அடிக்கடி  கோவிலுக்கு  செல்வதையும், புனித யாத்திரை   செல்வதையும்
என் அனுபவத்தில்  பார்த்திருக்கிறேன் .
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில்  கேது, 2_ல்  கேது,  5_ல்  கேது,
8_ல் கேது ,  12_ல்  கேது  இருந்தால்  அதிகஅளவு    ஆன்மீகத்தில்
ஆர்வம்  ஏற்படும்.         

புனர்பூ தோஷம் .

  வணக்கம்.                                                                                                                                 புனர்பூ தோஷம் என்பது ஜாதகத்தில்  சனி பகவான்   மற்றும்   சந்திரபகவா னால் ஏற்படுகிறது சனியின்  நட்சத்திரமான   பூசம்,அனுஷம்,  உத்திரட்டாதி நட்சத்திரங்களின் சந்திர பகவான்  இருந்தாலும் அல்லது சந்திரனின் நட்சத்திரமான ரோகினி,  ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் சனி பகவான் இருந்தாலும் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது சனிபகவானின் பார்வையான 3, 7, 10   சந்திர பகவான்    பெறுகிறபோது புனர்பூ  தோஷம் ஏற்படுகிறது. திருமணத்தடையை ஏற்படுத்தும்.  திருமணத்தை மணவறை வரை  கொண்டு வந்து   தடை செய்யும்ஆற்றல்    புனர்பூ  தோஷத்திற்கு   உண்டு.  இதற்கு பரிகாரமாக திருநள்ளாறு மற்றும் திருக்கடையூர் அபிராமி அம்மன் வழிபாடு செய்து நல்ல பலன்களை அடையலாம் .

திங்கள், 3 செப்டம்பர், 2018

எந்த லக்னத்திற்கு எந்த லக்னம் பொருந்தும்.

வணக்கம்.
 பெண்ணுடை  ஜாதகத்தில் உள்ள லக்னத்திற்க்கு பொருத்தமான ஆண் ஜாதகத்தில் உள்ள  லக்னம்.
பெண் ஜாதகத்தில் உள்ள லக்னம். 🎀ஆண் ஜாதகத்தில் உள்ள லக்னம்
1 .மேசம் லக்னம் *****மிதுனம் லக்னம், சிம்மம் லக்னம், துலாம் லக்னம், தனுசு லக்னம், கும்பம் லக்னம்,
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉1 .
2 . ரிசபம்  லக்னம்*****கடகம் லக்னம், கன்னி லக்னம், விருச்சிகம் லக்னம், மகரம் லக்னம், மீனம் லக்னம்  .
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
3.மிதுனம் லக்னம்*****சிம்மம் லக்னம், துலாம் லக்னம், தனுசு லக்னம், கும்பம் லக்னம், மேசம் லக்னம் .
🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏
4.கடகம் லக்னம்*****கன்னி லக்னம், விருச்சிகம் லக்னம்,
மகரம் லக்னம் ,மீனம் லக்னம் .
☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎
5 .சிம்மம் லக்னம்*****துலாம் லக்னம் ,தனுசு லக்னம், கும்பம் லக்னம், மேசம் லக்னம் .
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
6 .கன்னி லக்னம்*****விருச்சிகம் லக்னம், மகரம் லக்னம், மீனம் லக்னம், ரிசபம் லக்னம், கடகம் லக்னம் .
🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎
7 .துலாம் லக்னம்*****தனுசு லக்னம் ,கும்பம் லக்னம், மேசம் லக்னம் ,மிதுனம் லக்னம், சிம்மம் லக்னம் .
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
8.விருச்சிகம் லக்னம்*****மகரம் லக்னம் ,மீனம் லக்னம், ரிசபம் லக்னம், கடகம் லக்னம் ,கன்னி லக்னம்
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
9 .தனுசு லக்னம்*****கும்பம் லக்னம், மேசம் லக்னம், மிதுனம் லக்னம், சிம்மம் லக்னம் .துலாம் லக்னம் .
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
10.மகரம் லக்னம்*****மீனம் லக்னம், ரிசபம் லக்னம் ,கடகம் லக்னம்,  கன்னி, லக்னம் ,விருச்சிகம் லக்னம் .
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
11 .கும்பம் லக்னம் *****மேசம் லக்னம், மிதுனம் லக்னம், சிம்மம் லக்னம், துலாம் லக்னம், தனுசு லக்னம் .
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍12. மீனம் லக்னம் ****ரிசபம் லக்னம், கடகம் லக்னம், கன்னி லக்னம், விருச்சிகம் லக்னம், மகரம் லக்னம் .

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கல்வி, செல்வம் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு .


வணக்கம்.
கல்வி ,செல்வம்  தரும்  ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு .
              ஞானானந்தமயம் தேவம்
                    நிர்மல  ஸ்படிகாக்ருதிம்
              ஆதாரம்  ஸர்வ வித்யானாம்
                   ஹயக்ரீவ முயாஸ்மஹே
என்ற தியான ஸ்லோகம்  சொல்லி வழிபட வேண்டும்,
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து,  தேன்அபிஷேகம் செய்யவும், நாம் படிக்கும் பாடப்புத்தகம், நோட்டு, பேனா வைத்து வணங்க வேண்டும்.
அபிஷேகம்  செய்த தேனை தினசரி நாவில் வைத்து வரவும்.நல்ல ஞாபக சக்தி மற்றும் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். ஹயக்ரீவர் ஆலயம் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திபுரம் என்னும் இடத்தில் உள்ளது . புதன் கிழமை சென்று வணங்கி வர நன்மை உண்டாகும்.
   



சனி, 1 செப்டம்பர், 2018

கோகுலத்தில் கிருஷ்ண பகவான் .

வணக்கம் .
          கோகுலத்தில் கிருஷ்ண பகவான் படம் மற்றும் வீடியோ பார்த்து சந்தோசம் அடைந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுங்கள் .கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் .
             


கிருஷ்ண ஜெயந்தி


வணக்கம்,
            ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில் தேவகிக்கும், வசுதேவனுக்கும் 8-வது குழந்தையாக
கண்ணன் அவதரித்தார். அதே நேரத்தில் யசோதையின் வயிற்றில்
சக்தி (காளி தேவி) பெண் குழந்தையாக அவதரித்தாள். ‌

              குழந்தைகள் இட மாற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது. கம்சன்
பெண் குழந்தை என்றும் பாராமல் அதை கொல்ல வாளால் வெட்ட சென்றான்.
அப்பொழுது சக்தி, என் அண்ணன் உன்னை அழிக்க பிறந்து ஆயர்பாடியில்
'கிருஷ்ணராக' வாழ்கிறான் என்று அசரீதியுடன் வானில் மறைந்தாள் சக்தி.


          "நந்த கோபாலனின்" மகனான வளர்ந்த கண்ணன் கம்சனை வதம்
செய்து மக்களின் துயரம் மாற்றினார்.
         
           கண்ணன் பிறந்த தினத்தை நாம் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்". அவல் மற்றும் லட்டு படைத்து கிருஷ்ண
பகவானை வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.


                   
                                                                       நன்றி! 

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...