வணக்கம்.
மிதுனம்: மிருகசீரிடம்3,4பாதம்,திருவாதிரை,புனர்பூசம் இந்த நட்சத்திரங்களில் பிறந்த மிதுன ராசி நேயர்களே!
நல்ல மனவலிமையும் ,சிந்தனை வளமும் பெற்ற உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி பணவளர்ச்சியையும்,சிறு சோதனைகளையும் வழங்கும்.விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ,ரோக,சத்ரு ஸ்தானமான 6ஆம் இடமான விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையை பெறும் ராசிகள் மீனம் ,ரிஷபம், கடகம் .
குருவின் பார்வைபெறும் ராசிகள் ,மிதுனம் ராசிக்கு 2,10,12ஆம் இடமாகும்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டை தன காரகன் குரு பகவான் பார்க்கும் போது அளவிற்கு அதிகமாக செல்வங்கள் சேரும்,அதே நேரத்தில் ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் குரு இருப்பதால் அந்த பலனையும் சேர்த்து செய்யும்.நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.உடல் ரீதியாக சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சங்கடங்களை சமாளிக்க வேண்டிவரும்.
ஜீவன ஸ்தானமான 10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஜீவனத்திற்கு தேவையான பணம் கிடைக்கும்.விரய ஸ்தானமான 12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.செலவுகள் வராமல் இருப்பதற்கு தங்கள் குழந்தைகள் பெயரில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யவும்.
நன்றி .
மிதுனம்: மிருகசீரிடம்3,4பாதம்,திருவாதிரை,புனர்பூசம் இந்த நட்சத்திரங்களில் பிறந்த மிதுன ராசி நேயர்களே!
நல்ல மனவலிமையும் ,சிந்தனை வளமும் பெற்ற உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி பணவளர்ச்சியையும்,சிறு சோதனைகளையும் வழங்கும்.விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ,ரோக,சத்ரு ஸ்தானமான 6ஆம் இடமான விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையை பெறும் ராசிகள் மீனம் ,ரிஷபம், கடகம் .
குருவின் பார்வைபெறும் ராசிகள் ,மிதுனம் ராசிக்கு 2,10,12ஆம் இடமாகும்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டை தன காரகன் குரு பகவான் பார்க்கும் போது அளவிற்கு அதிகமாக செல்வங்கள் சேரும்,அதே நேரத்தில் ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் குரு இருப்பதால் அந்த பலனையும் சேர்த்து செய்யும்.நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.உடல் ரீதியாக சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சங்கடங்களை சமாளிக்க வேண்டிவரும்.
ஜீவன ஸ்தானமான 10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஜீவனத்திற்கு தேவையான பணம் கிடைக்கும்.விரய ஸ்தானமான 12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.செலவுகள் வராமல் இருப்பதற்கு தங்கள் குழந்தைகள் பெயரில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யவும்.
நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக