தேவையான பொருள்கள்:
1.சோயா பீன்ஸ் - 1 .
2. இஞ்சி - சிறிதளவு.
3. பொரி கடலை - 2 ஸ்பூன்.
4. சோம்பு - 1/2 ஸ்பூன்.
5. மிளகாய் வத்தல் - 3 எண்ணிக்கை.
6. உப்பு தேவையான அளவு.
7. கறிவேப்பிலை.
செய்முறை:
சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் நன்றாக நீர் விட்டு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
சோயா பீன்ஸை நன்றாக வேக விடவும்.
சோம்பு , மிளகாய் வத்தல் இரண்டையும் பொடியாக்கி அதனுடன் பொரி கடலை சேர்த்து ஒன்றிரண்டாக உடைத்து கறிவேப்பிலை யோடு சேர்த்து சுண்ட லில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
தாளிப்பதற்கு:
சிறிது எண்ணெயில் கடுகு மிளகாய் வத்தல், இஞ்சி தாளித்து சேர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக