சோளக்கதிர் சுண்டல்
தேவையான பொருள்கள்:
1.சோளக்கதிர் - 3 எண்ணிக்கை.
2. இட்லி மிளகாய்ப் பொடி - 2 ஸ்பூன்
3. இஞ்சி - சிறிதளவு.
4. எலுமிச்சைச்சாறு - 1/4 ஸ்பூன்.
5. கடுகு - 1/2ஸ்பூன்.
6. எண்ணெய் - 1/2ஸ்பூன்.
7. தேவையான அளவு உப்பு.
8. கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை:
சோளக்கதிர்களை சுத்தம் செய்து உப்புநீரில் போட்டு வேக விட்டு எடுத்து சோளக்கதிர் மணிகளை உதிர்த்துக் கொள்ளவும். இதில் இட்லி மிளகாய்ப் பொடி மற்றும் தட்டிய இஞ்சியும் சேர்த்துக் கிளறவும். நீர்ப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். அதனுடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து கிளறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பில்லை தாளித்து அதில் சோ ள மணிகளைச் சேர்த்துகிளறி சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக