வணக்கம்.
ஐஸ்வர்யங்கள் தரும் ஸ்ரீஷீரிடி ஸாயிபாபா.
வியாழக்கிழமைகளில் ஸாயிபாபா ஆலயம் சென்று வழிபடுங்கள்.
ஐஸ்வர்யங்கள் தரும் ஸ்ரீஷீரிடி ஸாயிபாபா.
வியாழக்கிழமைகளில் ஸாயிபாபா ஆலயம் சென்று வழிபடுங்கள்.
வியாழக்கிழமைகளில் ஸாயிபாபாவை நினைத்து விரதம் இருங்கள்.
ஒம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்
காலை அல்லது மாலை வேளைகளில் ஸாய் பாபாவை வணங்க வேண்டும் .
இந்த வியாழக்கிழமை விரதத்தில் பழங்கள், பால் ,இனிப்புகள் முதலியவைகளை வைத்து வணங்க வேண்டும். முக்கியமாக பொய் சொல்லக்கூடாது. ஸாய் நாதனுக்கு பொய் சொல்பவ்களைப் பிடிக்காது.
அடுத்தவர்கள் சொத்தை அபகரிப்பவர்களை ஸாய் பாபா நேரம் பார்த்து தண்டனை வழங்குவார். ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் வஸ்த்திரம் விரித்து அதன் மேல் ஸாய் பாபா படம் வைத்து தூய நீரால் படத்தை துணியால் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். ஸாய் பாபா காயத்திரி சொல்லி பழங்கள், கற்கண்டு, தேன், திராட்சை ,பொரி கடலை, அவல் எதுவேண்டுமானாலும் நைவேத்தியம் செய்து பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாது.
ஊதுபத்தி,தீபம் ஏற்றி வழிபடவும். ஒரே கோரிக்கையை மனதில் நினைத்து 9 வாரங்கள் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வேண்டுதல் செய்ய நன்மை
உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக