தேவையான பொருட்கள்:
கெட்டியான அவல்-(1மணி நேரம் ஊறவைக்கவும்)பச்சரிசி-2கப்(2மணி நேரம் ஊறவைக்கவும்).
பச்சை மிளகாய்-10.
தேங்காய் துருவியது-1கப்.
மிளகு-சிறிதளவு.
சீரகம்-சிறிதளவு.
இஞ்சி-சிறிதளவு.
கடலைப்பருப்பு-சிறிதளவு(ஊறவைத்தது)
எண்ணெய்-தேவையானஅளவு.
பெருங்காயம்-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
கெட்டியான அவல் ,பச்சரிசி,தேங்காய்துருவல்,பச்சைமிளகாய் போட்டுரவைபோல அரைத்து கடைசியாக உப்பு சேர்க்கவும்.இதை முதல் நாளே அரைக்கவும்.மறுநாள் மாவுடன் மிளகு,சீரகம்,இஞ்சி,கடலைப்பருப்பு சேர்க்கவும்.வாணலியில் எண்ணெய் கொஞ்சம் அதிகமாக ஊற்றி பெருங்காயம் போட்டு தாளித்து கலக்கவும்.குக்கர் தட்டில் 25 நிமிடம் மாவை ஊற்றி இட்லி வெந்தவுடன் எடுக்கவும்.வெயிட்போடவேண்டாம். சிம்மில் வேகவிடவும்.அவல் இட்லி தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக