வணக்கம்.
முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமி மலை.தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் அருகில் சுவாமிமலை திருக்கோவில் உள்ளது.புராண காலத்தில் திருவேரகம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.படைப்பு தொழிலுக்கு அதிபதியான பிரமதேவன் ஆணவத்தோடு இருந்தார்.அவரை முருகன் சந்திக்க நேர்ந்தது .அப்போது படைப்பு தொழில் செய்யும் உனக்கு ஓம் என்னும் பிரணவமந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்க ,இக்கேள்விக்கு பிரமனால் பதில் சொல்ல முடியவில்லைஎன்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டி கீழே விழுமாறு தம் திருக்கால்களால் பிரம்மாவை உதைத்து, பிரம்மாவை சிறையில் அடைத்தார்.பிரம்மாவின் படைப்பு தொழிலை முருகன் செய்தார்.பிரமன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார்.சிவ பெருமான் முருகனை பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார்.இதைப்பார்த்து மகிழ்ந்த சிவ பெருமான்,முருகனை தன் மடியில் வைத்துக் கொண்டு பிரம்மாவிற்கு தெரியாத பிரணவமந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். எல்லோரும் அறிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கூற கூடாதே என்று சொல்லி சிவ பெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தைஉரைத்தார்.இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சுவாமி மலைத்திருத்தலமாகும் .
நன்றி.
முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமி மலை.தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் அருகில் சுவாமிமலை திருக்கோவில் உள்ளது.புராண காலத்தில் திருவேரகம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.படைப்பு தொழிலுக்கு அதிபதியான பிரமதேவன் ஆணவத்தோடு இருந்தார்.அவரை முருகன் சந்திக்க நேர்ந்தது .அப்போது படைப்பு தொழில் செய்யும் உனக்கு ஓம் என்னும் பிரணவமந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்க ,இக்கேள்விக்கு பிரமனால் பதில் சொல்ல முடியவில்லைஎன்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டி கீழே விழுமாறு தம் திருக்கால்களால் பிரம்மாவை உதைத்து, பிரம்மாவை சிறையில் அடைத்தார்.பிரம்மாவின் படைப்பு தொழிலை முருகன் செய்தார்.பிரமன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார்.சிவ பெருமான் முருகனை பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார்.இதைப்பார்த்து மகிழ்ந்த சிவ பெருமான்,முருகனை தன் மடியில் வைத்துக் கொண்டு பிரம்மாவிற்கு தெரியாத பிரணவமந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். எல்லோரும் அறிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கூற கூடாதே என்று சொல்லி சிவ பெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தைஉரைத்தார்.இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சுவாமி மலைத்திருத்தலமாகும் .
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக