செவ்வாய், 27 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :8

வணக்கம்.விவேகானந்தரின்  அறிவுரைகள் தொடர்ச்சி ...
8.நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப்  பார்க்க முடியும்?ஏனென்றால் ,உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது.நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால்,அதை நாம் வெளியில் பார்க்க முடியாது.இந்த உண்மை,வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.வாழ்க்கையில் இந்த கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சிசெய்வோம் என்று நான் நம்புகிறேன்.அறிவுரைகள் தொடரும்...

விவேகானந்தரின் அறிவுரைகள் :7

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
7.ஒருவனுடைய இயல்பு எப்படிப்பட்டது என்பதை நீ உண்மையில் தீர்மானிக்க விரும்பினால்  அவன் செய்யும் பெரிய செயல்களைக் கவனிக்காதே.ஒவ்வொரு முட்டாளும் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் வீரனாகிவிடுவான்.ஒரு மனிதனை அவன் செய்யும் மிகச் சாதாரணமான காரியங்களின்  போது நீ கவனித்துப் பார்க்கவேண்டும்.ஏனென்றால் இத்தகைய சாதாரண செயல்கள் தாம்,பெரிய மனிதன் ஒருவனுடைய உண்மையான இயல்பை உனக்குத் தெரிவிப்பனவாக இருக்கும்.வாய்ப்புகள் மிகப்  பெருமளவில் கிடைக்கும் போது மிகத் தாழ்ந்த மனிதன் கூட இதே ஒரு வகையான உயரந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடுவான்.ஆனால் எங்கு இருந்தாலும்,யாருடைய இயல்பு எப்போதும் ஒரே மாதிரியான பெருந்தன்மை உடையதாக இருக்கிறதோ அவன் தான் உண்மையில் மிகப் பெரிய மனிதனாவான்..அறிவரைகள் தொடரும்...
                  நன்றி.

திங்கள், 26 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :6

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
6. ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான்.மிகவும் நல்லது .ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும்.ஒருவனால் சிறிதுகூட ஜீரணிக்க முடியாத ஓர்உணவு ,மற்றொருவனுக்கு எளிதில் ஜீரணமாக்கக் கூடியதாக இருக்கும்.உனக்கு பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி,சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் ,சங்கரிக்கும் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று முடிவிற்கு தாவிவிடாதே.கல்வி அறிவு இல்லாத,பண்பாடற்ற ,சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் இத்தகைய குறுகலான கட்டுக்குள் புகுத்தப்பட்டிருக் கிறார்கள்.நீயாகவே சந்தித்துப்பார்.நாத்திகனாக இருந்துவிட்டுப் போ!
இந்த  உலகமே பெரிது என்று நினைக்கும் இலெகிகனாக இருந்துவிட்டுப் போ!
அது கூட எவ்வளவோ பரவாயில்லை மனதைப் பயன்படுத்தி சிந்தித்துப் பார்க்கவேண்டும்.இந்த மனிதனுடைய வழி தவறானது என்று சொல்வதற்கு
உனக்கு என்ன உரிமை இருக்கிறது?உமக்கு வேண்டுமானால் அது தவறாக இருக்கலாம்.அதாவது நீ அந்த வழியைப் பின்பற்றினால் அதனால் உனக்கு கேடு விளையக்கூடும்.ஆனால் அதற்காக அந்த வழியால் அவன் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்பது அதன் பொருளல்ல.
           எனவே உன்னிடம் அறிவு இருந்து மற்றொருவன்பலகீனமாக இருப்பதை நீ பார்த்தால் ,அதற்காக அவனை நீ கண்டிக்காதே.உனக்கு இபலுமானால் அவனுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவனுக்கு நீ உதவி செய்.தானாகவே அவன் வளர்ச்சி பெற வேண்டும்.நான் அவனுடைய தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கூடை அறிவைத்திணித்துவிடுவேன்.ஆனால், அதனால் என்ன நன்மை நடந்துவிடப்போகிறது?அவன் முன்பு இருந்ததைவிட மேலும் சற்று அதிகம் மோசமானவனாகத்தான் இருப்பான்.அறிவுரைகள் தொடரும்...
          நன்றி.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :5

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
5.நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் ,நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும்,குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது.பிறகு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது.மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது.இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்.தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.அறிவுரைகள் தொடரும்...
         நன்றி.

வெள்ளி, 23 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :4

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
4.மனிதன் முடிவில்லாத பிரமாண்டமான ஒரு வட்டம் போன்றவன்.அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை.ஆனால் இந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது.கடவுள் பிரமாண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர்.அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது.ஆனால் அந்த வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது.கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இது தான்.அறிவுரைகள் தொடரும் ...

வியாழன், 22 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :3

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
3.ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான்.கீழ்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.பண்டைகாலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மச்சாரி முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம்.முதலில் கீழ்படிவதற்கு கற்றுக் கொள்.பிறகு கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வந்து சேரும்.எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொள்.அதன் பின்பு எஜமானாகும் தகுதி வந்து சேரும்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.

புதன், 21 நவம்பர், 2018

விவேகானந்தரின்அறிவுரைகள் :2

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி
2.ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்.ஏளனம்,எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல்.தனது காலத்தை விட்டு முற்ப்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான்.எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேர்க்கத்தக்கவையே.ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும் ,தூய்மையாக்கம் கடவுளிட ம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்கவேண்டும்.அப்படி இருந்தால் இந்த இடஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.அறிவுரைகள் தொடரும்...

செவ்வாய், 20 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்

வணக்கம்.
1.கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப்போட்டுத் திணித்துவைப்பதல்ல.அப்படி பிடிக்கப்படும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜுரணமாகாமல் உனக்கு தொந்தரவு கெடுத்துக் கொண்டே இருக்கும்.வாழ்க்கையை உருவாக்கக்கூடிய மனிதனை மனிதனாக்கக்கூடிய நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துக்களை கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும்.நீ ஐந்து உயர்ந்த கருத்துக்களைகருத்துக்களை கிரகித்துக் கொண்டு அவற்றை நீஉன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முதல்வதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.அறிவுரை தொடரும்.
 

வியாழன், 8 நவம்பர், 2018

துவாபரயுகம்

வணக்கம்.திரேதாயுகம் முடிந்த பிறகு குரோணியின் ஐந்தாவது துண்டத்தின் அம்சத்தின் மூலமாக அன்று ராவணனிடம் சொன்னபடியே துரியோதனாதிகளைப் படைத்தார்.அவர்களே பாண்டவர்களைப் பகைத்தனர்.கிருஷ்ண பரமாத்வாக அவதரித்த மகாவிஷ்ணுவோ பாண்டவர்களுக்குத் துணையாக நின்றார்.பாரதப் பெரும் போரில் வீமனின் தண்டாயுதத்தால் அடிபட்டு வீழ்ந்த துரியோதனனைப் பார்த்து இப்போதவது உனக்கு மேலான ஒரு சக்திதான் உன்னை இயக்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறாயா?
என்று கேட்ட கிருஷ்ண பரமாத்வாவிடம் என்னுடைய பங்காளியான வீமன் தான் என்னைக் கொன்றானே அல்லாது,உன்னால் என்னைக் கொல்ல ஒரு போதும் முடியாது என்று குற்றுயிராய்க் கிடந்த துரியோதனன் கொக்கரித்து மாண்டான்.அதை கேட்ட கிருஷ்ண பரமாத்மா துரியோதனா நீ குரோணியாக பிறந்ததில்  இருந்து இது வரை நடந்த ஆறு யுகங்களில் ஏழு முறை உன்னை பிறப்பித்துவிட்டோம்.பிறப்பித்த உன்னை இப்படி கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவே தான்,,உன்னுடய ஒவ்வொரு பிறப்பிலும் உனக்குப் புத்திமதி சொல்ல ஒவ்வொருவரை அனுப்பி வைத்தோம்.எவருடைய அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளாத நீ,உன்னுடைய ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடைய மரணத்திற்கு ஏறுக்கு மாறான காரணங்களையே சொல்லுகிறாய்.ஆகவே,உன்னுடைய இத்தனை பிறப்புகளுக்கும் காரணமாகிவிட்டது.இப்போதும் உன்னுடைய மரண வாக்குமூலம் தவறாகவே உள்ளது.எனவே அடுத்து வரும் கலியுகத்தில் உன்னை சின்னா பின்னமாக அதாவது பற்பலவாக கலியுகத்தின் ஆயுள் காலம் முடியும் வரை பிறப்பிப்போம்.அப்போதும் எம்முடைய வல்லமைகளைப் பற்றி நீ உணராமல் இருந்தால்,யாம் கலியுகத்தில் ஒரு சராசரி மனிதனைப் போல் அவதரித்து,அன்பைப் படையாகத் திரட்டி பொறுமை என்னும் தடுத்தாயுதத்தால் உன்னுடைய கொடுமைகளை அடக்கி தருமம் என்னும் வாளால் உன்னைமாழச் செய்வேன் என்று சூளுரைத்தார்.அங்கே தான் துரியோதனின் சகாப்தம் நிறைவு பெற்றது.அது தான் துவாபரயுகம்.நன்றி.

திங்கள், 5 நவம்பர், 2018

திரேதாயுகம்

வணக்கம்.கிரேதாயுகம் முடிவுற்ற பிறகு பத்து நகங்களுக்குப்  பதிலாக பத்து தலைகளோடும் படைபலத்தோடும் குரோணியின் நான்காவது துண்டத்தின் அம்சத்தின் மூலமாக இராவணனப் படைத்தார்கள்.மகாவிஷ்ணுவோ ராமனாக அவதரித்துஇராமாயணத்தினால் ராவணனனைக்கொல்லும் போது ராமனைப்பார்த்து எனக்குத் தம்பியெனப் பிறந்து சத்துருவாய்ச் சமைந்த விபூஷண ன் என்னுடைய உயிர் நிலையை உன்னிடம் சொன்னதினால் தான் என்னைக் கொண்றாயே அல்லாமல் உன்னால் என்னை கொல்ல முடியாது போடா என்று ராவணன் கர்ஜித்தான்.இப்படி இராவணனின் இறப்போடு முடிந்த யுகமே திரேதாயுகமாகும்.
நன்றி.

கிரேதாயுகம்

வணக்கம்.நீடியயுகம்,சதிர்யுகம்,நெடியயுகம் இந்த மூன்று யுகங்கள் முடிந்த பிறகு குறோணியின் மூன்றாவது துண்டத்தின் அம்சத்தின் மூலமாக சூரபத்மன்,சிங்கமுகா சூரன் என்ற இரண்டு அரக்கர்களை பிறப்பித்தனர்.ஜமுகனாலும் வெல்லமுடியாத வரங்களைப் பெற்ற அந்த அரக்கர்களை மகாவிஷ்ணு  ஆறுமுககடவுளாக அவதரித்து சக்தி என்னும் வேலினால் கொன்றார்.
அறிவு திறனோடு பிறந்து பக்தி பெருக்கினால்பல வரங்களைப் பெற்றிருந்தும் சூரபத்மன் சாகும் நேரத்தில் ஆறுமுகக் கடவுளைப் பார்த்து வேலினால் தான் என்னை வென்று கொன்றாயே அல்லாது,உன்னால் என்னைக் கொல்ல ஒரு போதும் முடியாது என்று வீராப்பு பேசினான்.அதே யுகத்தில் சூரனையே மீண்டும் இரணியனாக பிறப்பித்து மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமாகத் தோன்றி ஆயுதமே எடுக்காமல் தன்னுடைய நகத்தால் இரணியனைக் கொன்ற போது பத்து பெரிய மலைகளைப் பார நகமாக பதித்து வைத்தே இத்தலத்தில் என்னை கொன்றாய் என்று நரசிம்ம மூர்த்தியிடம் இரணியன் எக்காளமிட்டான் அதுவே கிரேதாயுகமாகும்.
     நன்றி.

ஞாயிறு, 4 நவம்பர், 2018

நெடியயுகம்

வணக்கம்.நீடியயுகம்,சதிர் யுகம் இரண்டும் நிறைவு பெற்றதும் தேவர்களெல்லாம் மும்மூர்த்திகளை அணுகி ,முடிந்த இரண்டு யுகங்களிலும்  அறிவு சற்றும் இல்லாத அசுரர்களைத்தான் பிறவி செய்து அழித்தீர்கள்.அதனால் தேவர்களாகிய எங்களின் பெருமையும்,தெய்வங்களாகிய உங்கள் சிறப்பும் வெளிப்பட வயிற்றுப் போயிற்று.அகவே அடுத்து தாங்கள் படைக்கும் அசுர்களை அறிவில் சிறந்தவர்களாகவும்,வரவலிமை பெற்றவர்களாகவும் மானிட இயல்புகளோடு பிறவி செய்யுங்கள் என்று முறையிட்டார்கள்.தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மும்மூர்த்திகளும்,குறோணியின் இரண்டாவது துண்டின் அம்சத்தின் மூலமாக தில்லை அல்லால்,மல்லோசிவாகனன் என்ற இரண்டு அரக்கர்களை அறிவு திறமையுடைபவர்களாகப் படைத்தனர்.வரவலிமை பெற்ற அந்த இரண்டு அரக்கர்களும் ,புனல் ரிஷியின் தரத்தைக் கெடுத்து,அவருடைய சாபத்தின்படி,மகாவிஷ்ணு எய்த மந்திர புரக்கணையால் மாண்டனர்.அந்த யுகமே நெடிய யுகமாகும்.
                                                         நன்றி!

சதிர்யுகம்

வணக்கம்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து நீடியயுகத்தில் தம்மால் மடிந்து போன குறோணியையும் இவ்வுலகி ல் நல்லவனாக ,நல்லவனாக வாழச்செய்ய வேண்டுமென்றெண்ணி குறோணியின் முதல் துண்டத்தின்அம்சமாக குண்டோமசாலியைப் படைத்தார்கள்.அந்த குண்டோமசாலியால் உலகமே அமைதியற்று தவித்தது.எனவே அவனையும் மகாவிஷ்ணு,தேவர்களின் துணையோடு தூண்டிலில் சிக்கவைத்து கொன்றார்.அதுவே சதிர்யுகமாகும்.
         நன்றி.

நீடியயுகம்

வணக்கம். இறைவன் இந்தபிரபஞ்சத்தைப் பிறப்பித்ததுமே ஏகமாய்எங்கும் நல்வினைகள் மட்டுமே வியாபித்திருந்தது.எனவே உலகில் எந்தவித நிகழ்வுகளும் ஏற்படவில்லை.ஆகவே உலகத்தை இயக்கும் பொருட்டு ,தீ வினையின் முதல்வனாக குரோணி என்றோர் அசுரனைப்படைத்தார்.அகோர வடிவத்தில் அண்டம் நிறைந்தவனாகப் பிறந்த மாத்திரத்திலேயே தாங்கொணாப் பசி உண்டாயிற்று.தன் பசிக்கு உணவாக இந்த உலகத்தை விழுங்க முனைந்தான்.இவ்வகைப் பசிகளே உலக இயக்கத்திற்கு வித்தாகும்என்பதையுணர்ந்த மகாவிஷ்ணு,சிவ பெருமானின் அனுமதியோடு தன்னுடைய ஞானமென்னும் ஆயுதத்தால் அந்த குரோணியை ஆறு கூறுகளாக வெட்டிக் கொண்டு,அந்த அசுரனிடமிருந்து இந்த உலகத்தை காத்தருளினார்.அத்துடன் குரோணியின் சகாப்தம் முடிவடைந்தது.அந்த யுகமே நீடியயுகமாகும்.
                      நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2018

தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்

வணக்கம்.தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்.
             தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய துதி :
"இல்லக விளக்கது இருள்கொடுப்பது
 பல்லக விளக்கது பலரும் காண்பது
 சொல்லக விளக்கது சோதி உள்ளது
 நல்லக விளக்கது நமச்சிவாயவே !
குத்து விளக்கு :5முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
1.குத்து விளக்கு ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றும் போது அஷ்ட ஐஸ்வர்யம் ஏற்படும். அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும்.
2.குத்து விளக்கு நான்கு முகங்களில் தீபம் ஏற்றும் போது வீடு,வாகனம் அபிவிருத்தி ஏற்படும் .
3.குத்து விளக்கு மூன்று முகங்களில் தீபம் ஏற்றும் போது தைரியவீரியம் மற்றும் காரிய வெற்றி ஏற்படும்.
4.குத்து விளக்கு இரண்டு முகங்களில் தீபம் ஏற்றும் போது குடும்ப ஒற்றுமை,தனச்சேர்க்கை,செல்வாக்கு உண்டாகும்.
5.குத்து விளக்கு ஒரு முகம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
 

வியாழன், 1 நவம்பர், 2018

அஷ்டலிங்கங்கள் -ராசிகள்

வணக்கம்.
அஷ்டலிங்கங்கள் -- -ராசிகள்-- --------திசைகள்.
1. இந்திர லிங்கம் -ரிஷபம்,துலாம்-(கிழக்கு )
2.அக்னி லிங்கம்--  சிம்மம்.( தென்கிழக்கு)
3.எம லிங்கம் --மேசம்,விருச்சிகம்.(தெற்கு)
4.நிருதி லிங்கம் --எல்லா ராசிகளும்.(தென்மேற்கு)
5.வருண லிங்கம் --மகரம்,கும்பம்.(மேற்கு)
6.வாயு லிங்கம்-- கடகம்.(வடமேற்கு)
7.குபேர லிங்கம் --தனுசு, மீனம்.(வடக்கு)
8.ஈசான லிங்கம் --மிதுனம், கன்னி .(வடகிழக்கு).
திருவண்ணாமலை செய்பவர்கள் அஷ்டலிங்கங்களை வணங்கி ஈசனின் அருளைப் பெற்று வளமுடன் வாழுங்கள்.நன்றி.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...