வணக்கம். இறைவன் இந்தபிரபஞ்சத்தைப் பிறப்பித்ததுமே ஏகமாய்எங்கும் நல்வினைகள் மட்டுமே வியாபித்திருந்தது.எனவே உலகில் எந்தவித நிகழ்வுகளும் ஏற்படவில்லை.ஆகவே உலகத்தை இயக்கும் பொருட்டு ,தீ வினையின் முதல்வனாக குரோணி என்றோர் அசுரனைப்படைத்தார்.அகோர வடிவத்தில் அண்டம் நிறைந்தவனாகப் பிறந்த மாத்திரத்திலேயே தாங்கொணாப் பசி உண்டாயிற்று.தன் பசிக்கு உணவாக இந்த உலகத்தை விழுங்க முனைந்தான்.இவ்வகைப் பசிகளே உலக இயக்கத்திற்கு வித்தாகும்என்பதையுணர்ந்த மகாவிஷ்ணு,சிவ பெருமானின் அனுமதியோடு தன்னுடைய ஞானமென்னும் ஆயுதத்தால் அந்த குரோணியை ஆறு கூறுகளாக வெட்டிக் கொண்டு,அந்த அசுரனிடமிருந்து இந்த உலகத்தை காத்தருளினார்.அத்துடன் குரோணியின் சகாப்தம் முடிவடைந்தது.அந்த யுகமே நீடியயுகமாகும்.
நன்றி.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக