வணக்கம்.திரேதாயுகம் முடிந்த பிறகு குரோணியின் ஐந்தாவது துண்டத்தின் அம்சத்தின் மூலமாக அன்று ராவணனிடம் சொன்னபடியே துரியோதனாதிகளைப் படைத்தார்.அவர்களே பாண்டவர்களைப் பகைத்தனர்.கிருஷ்ண பரமாத்வாக அவதரித்த மகாவிஷ்ணுவோ பாண்டவர்களுக்குத் துணையாக நின்றார்.பாரதப் பெரும் போரில் வீமனின் தண்டாயுதத்தால் அடிபட்டு வீழ்ந்த துரியோதனனைப் பார்த்து இப்போதவது உனக்கு மேலான ஒரு சக்திதான் உன்னை இயக்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறாயா?
என்று கேட்ட கிருஷ்ண பரமாத்வாவிடம் என்னுடைய பங்காளியான வீமன் தான் என்னைக் கொன்றானே அல்லாது,உன்னால் என்னைக் கொல்ல ஒரு போதும் முடியாது என்று குற்றுயிராய்க் கிடந்த துரியோதனன் கொக்கரித்து மாண்டான்.அதை கேட்ட கிருஷ்ண பரமாத்மா துரியோதனா நீ குரோணியாக பிறந்ததில் இருந்து இது வரை நடந்த ஆறு யுகங்களில் ஏழு முறை உன்னை பிறப்பித்துவிட்டோம்.பிறப்பித்த உன்னை இப்படி கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவே தான்,,உன்னுடய ஒவ்வொரு பிறப்பிலும் உனக்குப் புத்திமதி சொல்ல ஒவ்வொருவரை அனுப்பி வைத்தோம்.எவருடைய அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளாத நீ,உன்னுடைய ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடைய மரணத்திற்கு ஏறுக்கு மாறான காரணங்களையே சொல்லுகிறாய்.ஆகவே,உன்னுடைய இத்தனை பிறப்புகளுக்கும் காரணமாகிவிட்டது.இப்போதும் உன்னுடைய மரண வாக்குமூலம் தவறாகவே உள்ளது.எனவே அடுத்து வரும் கலியுகத்தில் உன்னை சின்னா பின்னமாக அதாவது பற்பலவாக கலியுகத்தின் ஆயுள் காலம் முடியும் வரை பிறப்பிப்போம்.அப்போதும் எம்முடைய வல்லமைகளைப் பற்றி நீ உணராமல் இருந்தால்,யாம் கலியுகத்தில் ஒரு சராசரி மனிதனைப் போல் அவதரித்து,அன்பைப் படையாகத் திரட்டி பொறுமை என்னும் தடுத்தாயுதத்தால் உன்னுடைய கொடுமைகளை அடக்கி தருமம் என்னும் வாளால் உன்னைமாழச் செய்வேன் என்று சூளுரைத்தார்.அங்கே தான் துரியோதனின் சகாப்தம் நிறைவு பெற்றது.அது தான் துவாபரயுகம்.நன்றி.
என்று கேட்ட கிருஷ்ண பரமாத்வாவிடம் என்னுடைய பங்காளியான வீமன் தான் என்னைக் கொன்றானே அல்லாது,உன்னால் என்னைக் கொல்ல ஒரு போதும் முடியாது என்று குற்றுயிராய்க் கிடந்த துரியோதனன் கொக்கரித்து மாண்டான்.அதை கேட்ட கிருஷ்ண பரமாத்மா துரியோதனா நீ குரோணியாக பிறந்ததில் இருந்து இது வரை நடந்த ஆறு யுகங்களில் ஏழு முறை உன்னை பிறப்பித்துவிட்டோம்.பிறப்பித்த உன்னை இப்படி கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவே தான்,,உன்னுடய ஒவ்வொரு பிறப்பிலும் உனக்குப் புத்திமதி சொல்ல ஒவ்வொருவரை அனுப்பி வைத்தோம்.எவருடைய அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளாத நீ,உன்னுடைய ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடைய மரணத்திற்கு ஏறுக்கு மாறான காரணங்களையே சொல்லுகிறாய்.ஆகவே,உன்னுடைய இத்தனை பிறப்புகளுக்கும் காரணமாகிவிட்டது.இப்போதும் உன்னுடைய மரண வாக்குமூலம் தவறாகவே உள்ளது.எனவே அடுத்து வரும் கலியுகத்தில் உன்னை சின்னா பின்னமாக அதாவது பற்பலவாக கலியுகத்தின் ஆயுள் காலம் முடியும் வரை பிறப்பிப்போம்.அப்போதும் எம்முடைய வல்லமைகளைப் பற்றி நீ உணராமல் இருந்தால்,யாம் கலியுகத்தில் ஒரு சராசரி மனிதனைப் போல் அவதரித்து,அன்பைப் படையாகத் திரட்டி பொறுமை என்னும் தடுத்தாயுதத்தால் உன்னுடைய கொடுமைகளை அடக்கி தருமம் என்னும் வாளால் உன்னைமாழச் செய்வேன் என்று சூளுரைத்தார்.அங்கே தான் துரியோதனின் சகாப்தம் நிறைவு பெற்றது.அது தான் துவாபரயுகம்.நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக