வணக்கம்.நீடியயுகம்,சதிர் யுகம் இரண்டும் நிறைவு பெற்றதும் தேவர்களெல்லாம் மும்மூர்த்திகளை அணுகி ,முடிந்த இரண்டு யுகங்களிலும் அறிவு சற்றும் இல்லாத அசுரர்களைத்தான் பிறவி செய்து அழித்தீர்கள்.அதனால் தேவர்களாகிய எங்களின் பெருமையும்,தெய்வங்களாகிய உங்கள் சிறப்பும் வெளிப்பட வயிற்றுப் போயிற்று.அகவே அடுத்து தாங்கள் படைக்கும் அசுர்களை அறிவில் சிறந்தவர்களாகவும்,வரவலிமை பெற்றவர்களாகவும் மானிட இயல்புகளோடு பிறவி செய்யுங்கள் என்று முறையிட்டார்கள்.தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மும்மூர்த்திகளும்,குறோணியின் இரண்டாவது துண்டின் அம்சத்தின் மூலமாக தில்லை அல்லால்,மல்லோசிவாகனன் என்ற இரண்டு அரக்கர்களை அறிவு திறமையுடைபவர்களாகப் படைத்தனர்.வரவலிமை பெற்ற அந்த இரண்டு அரக்கர்களும் ,புனல் ரிஷியின் தரத்தைக் கெடுத்து,அவருடைய சாபத்தின்படி,மகாவிஷ்ணு எய்த மந்திர புரக்கணையால் மாண்டனர்.அந்த யுகமே நெடிய யுகமாகும்.
நன்றி!
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக