திங்கள், 5 நவம்பர், 2018

கிரேதாயுகம்

வணக்கம்.நீடியயுகம்,சதிர்யுகம்,நெடியயுகம் இந்த மூன்று யுகங்கள் முடிந்த பிறகு குறோணியின் மூன்றாவது துண்டத்தின் அம்சத்தின் மூலமாக சூரபத்மன்,சிங்கமுகா சூரன் என்ற இரண்டு அரக்கர்களை பிறப்பித்தனர்.ஜமுகனாலும் வெல்லமுடியாத வரங்களைப் பெற்ற அந்த அரக்கர்களை மகாவிஷ்ணு  ஆறுமுககடவுளாக அவதரித்து சக்தி என்னும் வேலினால் கொன்றார்.
அறிவு திறனோடு பிறந்து பக்தி பெருக்கினால்பல வரங்களைப் பெற்றிருந்தும் சூரபத்மன் சாகும் நேரத்தில் ஆறுமுகக் கடவுளைப் பார்த்து வேலினால் தான் என்னை வென்று கொன்றாயே அல்லாது,உன்னால் என்னைக் கொல்ல ஒரு போதும் முடியாது என்று வீராப்பு பேசினான்.அதே யுகத்தில் சூரனையே மீண்டும் இரணியனாக பிறப்பித்து மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமாகத் தோன்றி ஆயுதமே எடுக்காமல் தன்னுடைய நகத்தால் இரணியனைக் கொன்ற போது பத்து பெரிய மலைகளைப் பார நகமாக பதித்து வைத்தே இத்தலத்தில் என்னை கொன்றாய் என்று நரசிம்ம மூர்த்தியிடம் இரணியன் எக்காளமிட்டான் அதுவே கிரேதாயுகமாகும்.
     நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...