திங்கள், 24 டிசம்பர், 2018

தெய்வீக குழந்தை

வணக்கம்.இயேசு கிறிஸ்து ஒரு ஆணுடைய துணையில்லாமல் பரிசுத்த ஆவியி னால் உற்பவிக்கப்பட்டு பிறந்தார்.தேவதூதன் மரியாளைநோக்கி,பரிசுத்த ஆவி உன் மேல் வரும் .உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்.ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது.
தேவனுடைய குமாரனெப்படும்.
    பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்தார்.இழந்து போன தை தேடவும் ,இரட்சிக்கவுமே இயேசு கிறிஸ்து வந்தார்.நம்முடை இரட்சகராகிய இயேசு பிரசன்னமானதினாலே அந்த கிருபை இப்பொழுது வெளிப்பட்டது.
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      நன்றி.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

தேவனே என்னைப் பாருங்கள்

வணக்கம்.ஏசு கிருஸ்து அவதரித்த நிகழ்ச்சியை குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.கிருஸ்துமஸ் என்றால் கிருஸ்துவிற்கு செய்யும் வழிபாடு என்று பொருள்.கிருஸ்துமஸ் பண்டிகை அன்று ஆனந்தமான கடவுள் பாட்டுக்களை பாடுதல்,கிருஸ்துவின் சிறப்பைப் பற்றிய நாடகங்களை நடத்துதல்,வீடுகளை அலங்காரம் செய்தல்,ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் வெகுமதியையும் வழங்குதல்,விருந்துண்ணுதல் இவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களாகும்.
             இரவில் வயல் வெளியில் சிறு நெருப்பை சுற்றி உட்கார்ந்து கொண்டு தம் மந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டிடையர்கள் முன் திடீரென ஒரு தேவ தூதன் தோன்றினான்.அந்த ஒளி தாங்கமுடியாமல்இடையர்கள் ஒருவருக்கொருவரை கட்டிப்பிடித்துக் கொண்டனர்.உடனே தேவ தூதன் அவர்களைப் பயப்படாமல் இருக்கச் சொல்லி இன்று எல்லா மக்களையும் காக்கும்  ரக்ஷகனாக ஏசு கிருஸ்து ஆண்டவன் டேவிட் நகரத்தில் அவதரிக்கிரார் என்றும் பல மடிப்புள்ள துணியால் சுற்றப்பட்டு அத்தெய்வீகக் குழந்தை வைக்கோல் தொழுவத்தில் கிடப்பதை அடையாளமாக வைத்துக்கொணடு அவரை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய போது திடீரென வானத்தில் தேவதைகள் கூட்டம் தோன்றி மிக உயர்ந்த நிலையில் உள்ள கடவுளின் மகிமை விளங்குவதாக பூவுலகில் அமைதியும் மக்களிடையே தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று துதி செய்தார்கள்.தேவன் ஏசுவின் வருகை மிக அருகில்.மீண்டும் ஏசு பிறப்பிற்காக வானத்து நோக்கிய பார்வை
          தேவனே என்னைப் பாருங்கள் தொடரும் ...
   நன்றி.

வியாழன், 20 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :16

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
16.தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிரு.தீய சமஸ்காரங்களைத் தலைகாட்டாதபடி அழுத்தி வைப்பதற்கு அது ஒன்றே ஒன்று தான் வழி.எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே.ஏனென்றால் ,அவன் ஒருவிதப் பழக்க வழக்கங்களின் தொகுப்பாக,குறிப்பிட்ட ஓர் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் தான் விளங்குகின்றான்.அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்துவிட முடியும்.ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது.எனவே ,மேலும்சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்கமுடியும்...பிரம்மச்சாரியம் அனுஷ்டிப்பவனுடைய மூளைக்கு அபாரமான ஆற்றலும் அதீதமான மனவலிமையும் உண்டு.அறிவுரைகள் தொடரும்...
            நன்றி.

புதன், 19 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:15

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
15.நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான்,நீ சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும்.ஒருவன் வாடிய முகத்தோடு இருப்பது சூன்ய  வியாதியின் விளைவாக இருக்கலாமேயன்றி,அது மத வாழ்க்கை ஆகாது.துன்பம் பாவத்தினால் ஏற்படுகிறது.அதைத் தவிர,பாவம் விளைவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது?அப்படி இருப்பது பயங்கரமானது.உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால்,அன்றைய தினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக்கொண்டு உள்ளேயே இரு.வெளியுலகத்திற்கு இந்த நோயைச் சுமந்து கொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?அறிவுரைகள் தொடரும்...
          நன்றி.

விவேகானந்தரின் அறிவுரைகள்:14

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
14.ஒவ்வொருவனும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சமீதமின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையேனும் செய்து சாதிக்க முடியுமா?உழைப் பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்.பின்னால் திரும்பிப்பார்க்கத் தேவையில்லை.முன்னோக்கிச் செல்.அளவற்ற ஆற்றல்,பெரும் ஊக்கம் அளவு கடந்த அஞ்சாமை,அளவில்லாத பொறுமை -இவையே நமக்குத் தேவை.இவை இருந்தால் மட்டுமே, மகத்தான காரியங்களை நம்மால் சாதிக்க முடியும் .அறிவுரைகள் தொடரும் ...
      நன்றி.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :13

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
13.நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று சொல்லுகிறோம்.அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது .சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது.வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.அறிவுரைகள் தொடரும்...
       நன்றி.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :12

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
12..நம்மைப் பற்றிபே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம்தான் மிகப் பெரிய பாவமாகும்.நான் தான் முதலில் சாப்பிடுவேன் நான் தான் மற்றவர்களைவிட அதிக செல்வம் பெற்றவனாக இருப்பேன்.எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு முன்பு நானே தான் சொர்க்கம் போவேன்.மற்றவற்களுக்கு கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைவேன் என்றும் நினைப்பவன் தான் சுயநலவாதி ஆவான்.நான் தான் கடைசி ஆளாக  இருப்பேன் சொர்க்கத்திற்குப்  போவதைப் பற்றியும் நான் பொருட்படுத்தவில்லை நரகத்திற்கு செல்வதன் மூலமாக என்னுடைய சகோதர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியுமானால் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சுயநலம் இல்லாதவன் சொல்கிறான்.
இத்தகைய தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மீக வாழ்க்கை இருப்பதற்கும் இல்லாதிருப்பதற்கும் உரிய சோதனையாகும்.இவ்விதச்  சுயநலமற்ற தன்மையைப் பெருமளவிற்கு ஆன்மீக வாழ்க்கையைப் பெற்றவனாகிறான்.அவனே மற்றவர்களைக் காட்டிலும் சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.அறிவுரைகள் தொடரும்...
                   நன்றி.


வியாழன், 6 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:11

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
11.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்.
1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
2.பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்.
3.நல்லவர்களாக இருக்கவும் நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.அறிவுரைகள் தொடரும்...
     நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:10

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
10 .உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையையும் செயலும்,அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம்பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்கவேண்டும்.உனது தீயஎண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன.அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உண்மை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.அறிவுரைகள் தொடரும்...
       

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:9

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
9.மனிதனுக்கு மன அமைதியைத்தருவது தான் மதத்தின் அடிப்படை இலச்சியமாகும்.மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுவிப்பது அறிவுடைய செயலாகாது.
ஒருவன் இங்கேயே இப்போதே ,இன்பத்தைப் பெற வேண்டும்.இப்படிப்பட்டஇன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.அறிவுரைகள் தொடரும்...
      நன்றி.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...