வெள்ளி, 7 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :12

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
12..நம்மைப் பற்றிபே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம்தான் மிகப் பெரிய பாவமாகும்.நான் தான் முதலில் சாப்பிடுவேன் நான் தான் மற்றவர்களைவிட அதிக செல்வம் பெற்றவனாக இருப்பேன்.எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு முன்பு நானே தான் சொர்க்கம் போவேன்.மற்றவற்களுக்கு கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைவேன் என்றும் நினைப்பவன் தான் சுயநலவாதி ஆவான்.நான் தான் கடைசி ஆளாக  இருப்பேன் சொர்க்கத்திற்குப்  போவதைப் பற்றியும் நான் பொருட்படுத்தவில்லை நரகத்திற்கு செல்வதன் மூலமாக என்னுடைய சகோதர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியுமானால் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சுயநலம் இல்லாதவன் சொல்கிறான்.
இத்தகைய தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மீக வாழ்க்கை இருப்பதற்கும் இல்லாதிருப்பதற்கும் உரிய சோதனையாகும்.இவ்விதச்  சுயநலமற்ற தன்மையைப் பெருமளவிற்கு ஆன்மீக வாழ்க்கையைப் பெற்றவனாகிறான்.அவனே மற்றவர்களைக் காட்டிலும் சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.அறிவுரைகள் தொடரும்...
                   நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...