ஞாயிறு, 28 அக்டோபர், 2018

தெய்வங்களுக்கு செய்யும் அபிஷேகபொருட்களும் பயன்களும்

வணக்கம்.தெய்வங்களுக்கு செய்யும் அபிஷேக பொருட்களும் பயன்களும்.
1.பால் அபிஷேகம் --தீர்காயுள் தரும்.
2.தேன் அபிஷேகம்-- இனிய குரல் வளம் உண்டாகும்.
3.தயிர் அபிஷேகம் --நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.
4.நெய் அபிஷேகம் --வீடு பேறு அடைதல் உண்டாகும்.
5.சர்க்கரை அபிஷேகம்--எதிரிகள் தொல்லை நீங்கும்.
6.பஞ்சாமிர்தம் அபிஷேகம் --உடல் வலிமை பெறும்.
7.கரும்பு சாறு அபிஷேகம்--நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
8.நல்லெண்ணெய் அபிஷேகம்-- விஷ காய்ச்சல் நீங்கும்.
9.சந்தனாதித் தைலம்  அபிஷேகம் --நல்ல சுகம் கிடைக்கும்.
10.இளநீர் அபிஷேகம் --நல்ல போகம் கிடைக்கும்.
11.சந்தனம் அபிஷேகம்--நல்ல செல்வம் உண்டாகும்.
12.பன்னீர் அபிஷேகம் --நல்ல புகழ் கிடைக்கும்.
13.அன்னம் அபிஷேகம் --சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
14.எலுமிச்சை சாறு அபிஷேகம் --சகல விதமான பகையை அழிக்கும்.
15.மஞ்சள் அபிஷேகம் --மங்களம் அளிக்கும்.
16.விபூதி அபிஷேகம்--கர்ம  வினைகளை நீக்கி மோட்சம் கிடைக்கும்.
                

சனி, 27 அக்டோபர், 2018

டால்பின் வரைவது பற்றிய வீடியோ

வணக்கம்.டால்பின் வரைவது பற்றிய வீடியோ.
சுலபமாக டால்பின் எப்படி வரைவது என்று எங்களது YouTube channel பாருங்கள்.
நன்றி.

திங்கள், 22 அக்டோபர், 2018

மனித உடலில் பஞ்ச பூதங்களின் ஆதிக்கம்

வணக்கம்.மனித உடலில் பஞ்ச பூதங்களின் ஆதிக்கம்.
தலை-ஆகாயம் (ய)என்ற பஞ்ச பூதம் ஆதிக்கம் செலுத்துகிறது.
மார்பு -வாயு (வ)என்ற பஞ்ச பூதம் ஆதிக்கம் செலுத்துகிறது.
வயிறு -நெருப்பு (சி) என்ற பஞ்ச பூதம் ஆதிக்கம் செலுத்துகிறது.
தொடை-நீர்(ம)என்ற பஞ்ச பூதம் ஆதிக்கம் செலுத்துகிறது.
முழங்கால் முதல் பாதம் வரை --நிலம்(ந )என்ற பஞ்ச பூதம் ஆதிக்கம் செலுத்துகிறது.
நிலம்(ந)
நீர்(ம)
நெருப்பு (சி)
காற்று (வ)
ஆகாயம்( ய)
பாதம் முதல் தலை வரை நமசிவய என்ற பஞ்ச பூதங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது.
                          நன்றி.



வியாழன், 18 அக்டோபர், 2018

மகிஷியை அழித்த ஐயப்பன்

வணக்கம்.சிவனுக்கும்,மோகினியாக மாறிய விஷ்ணு பகவானுக்கும் மகனாக பிறந்தவர் ஐயப்பன்.கேரளாவில் பந்தளமகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி சிவ பெருமானை வேண்டிவந்தார்.அதே சமயத்தில் மகிஷாசுரனின் தங்கையான மகிஷி என்ற அரக்கி தேவர்கள் மற்றும் ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.காட்டில் பிறந்த ஐயப்பன் மகிஷியை அழிப்பதற்காக அவதரித்தவன்.
சிவனும்,விஷ்ணுவும் குழந்தையை மரத்தடியில் விட்டு விட்டு தேவலோகம் சென்று விட்டார்கள்.பந்தளமகாராஜா விலங்குகளை  வேட்டையாட காட்டிற்கு செல்லும் போது காட்டில் மரத்தடியில் ஒரு குழந்தையின் அழகின்ற சப்தம் கேட்டு அந்த குழந்தையை பார்த்தார்.என் குழந்தையில்லா குறையை போக்கவே இறைவன் அளித்த பரிசாக எண்ணி அந்த தெய்வ அம்சமான குழந்தையை அரண்மணைக்கு கொண்டு சென்றான்.அரசியும் மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு தன் குழந்தையாகவே வளர்த்து வந்தனர்.மணிகண்டன் வந்த நேரம் அரசி கரு உற்றாள்.ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.உனக்கு என்று ஒரு மகன் இருக்கும் போது மணிகண்டனை நீ தலைப்பிள்ளை போல் வளர்த்து வருகிறாய் என்று அரசபையில் உள்ள சில புல்லுரிவிகள் அரசியின் மனதை குழப்பமடைய செய்தார்கள்.
தீய போதனையால் அரசிமாறினால் தான் வயிற்று வழியால் அவதிபடுவதாய் பொய் உரைத்தாள்.அரசவை வைத்தியரிடம் புலிப்பால் குடித்தால் மட்டுமே அரசியின் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.தாய் சொல்லை தட்டாத ஐயப்பன் புலிப்பால் கொண்டு வருவதற்காக காட்டிற்கு புறப்பட்டான்.வழியில் வந்த மகிஷி ஐயப்பனை தடுத்தாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியை வதம் செய்தான்.அவதார மகிமை பூர்த்தியானது.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரன் புலியாக மாற மற்ற தேவர்கள் புலியாக சூழ புலி மேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.
புலி மேல் வந்த ஐயப்பனை கண்டு பதறிப்போனாள் அரசி.தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ,புலிகளை காட்டிற்கு திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் செய்து அருளினான்.மேலும் தன் அவதார காலம் பூர்த்தி அடைந்து விட்டதாகவும்,தான் சபரிமலை சென்று தவம் இருக்கப்போவதாகவும் ,தன்னை காண வேண்டுமானால் நீங்கள் சபரிமலைக்குதான் வர வேண்டும் என்று ஐயப்பன் கூறினான்.ஐயப்பனை வணங்கி அவன் அருளைப் பெறுவோம்.
நன்றி.

திங்கள், 15 அக்டோபர், 2018

தந்தைக்கு பிரணவ மந்திரம் அருளிய முருகன்

வணக்கம்.
முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமி மலை.தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் அருகில் சுவாமிமலை திருக்கோவில் உள்ளது.புராண காலத்தில் திருவேரகம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.படைப்பு தொழிலுக்கு அதிபதியான பிரமதேவன் ஆணவத்தோடு இருந்தார்.அவரை முருகன் சந்திக்க நேர்ந்தது .அப்போது படைப்பு தொழில் செய்யும் உனக்கு ஓம் என்னும் பிரணவமந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்க ,இக்கேள்விக்கு பிரமனால்  பதில் சொல்ல முடியவில்லைஎன்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டி கீழே விழுமாறு தம் திருக்கால்களால் பிரம்மாவை உதைத்து, பிரம்மாவை சிறையில் அடைத்தார்.பிரம்மாவின் படைப்பு தொழிலை முருகன் செய்தார்.பிரமன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார்.சிவ பெருமான் முருகனை பிரம்மாவை  விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார்.இதைப்பார்த்து மகிழ்ந்த சிவ பெருமான்,முருகனை தன் மடியில் வைத்துக் கொண்டு பிரம்மாவிற்கு தெரியாத பிரணவமந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். எல்லோரும் அறிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கூற கூடாதே என்று சொல்லி சிவ பெருமான் காதருகே  சென்று பிரணவ மந்திரத்தைஉரைத்தார்.இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சுவாமி மலைத்திருத்தலமாகும் .
                                      நன்றி.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

அண்ணன்-தங்கை அவதாரம் பிரம்மா- சரஸ்வதி

வணக்கம்.சத்தியலோகத்தில் தம்பதிகளாக  வாழ்ந்து வந்த பிரம்மா,சரஸ்வதி க்குகிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.படைப்பு தொழிலுக்கு நான் தான் அதிபதி என்றுபிரம்மாவும்,கல்விக்கு அரசி நான் தான் என சரஸ்வதியும் வாதிட,வாக்கு வாதம்முற்றி இருவரும்ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர்.இதனால் பூலோகத்தில் சோழ  நாட்டில் புண்ணிய கீர்த்தி -சோபனை என்ற தம்பதிகளுக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும் (பிரம்மா), சிரத்தை (சரஸ்வதி)மகளாகவும் அவதரித்தனர்.அவர்களுக்கு திருமண வயது வந்ததும் வரண் தேட ஆரம்பித்தார்கள்.அப்பொழுது அவர்கள்இருவருக்கும் தான் யார் என்பது நினைவுக்கு வந்தது .சகோதரநிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்தால் ஊர்,உலகம் பழிக்குமே என அஞ்சினர்.பெற்றோருக்கு இவ்விடம தெரிய வந்தது .சிவனை நினைத்து பிராத்தணை செய்தனர்.அவர்கள் பிராத்தணையை கேட்ட சிவன் அவர்கள் முன்பாக தோன்றி இப்பிறவியில் சகோதர ஸ்தானத்தில் அவதரித்தால் நீங்கள் திருமணம் செய்ய இயலாது. எனவே நீ மட்டும் தனியாக கோயில் கொண்டு கன்னிகையாக இருந்து கல்வி செல்வத்தை  வழங்கு எனஅருள்பாலித்தார்.வாக்கு சித்தி தரும் வாணியாக சரஸ்வதி தேவி கூத்தனூர் ஆலயத்தில் அருள் பாலிக்கிறாள்.கன்னியாக வாக்கு ,கல்வி செல்வம் தரும் வாணியை சரண்அடைவோம்.வாக்கு சித்தி பெறுவோம்.
                             
  நன்றி.

புதன், 10 அக்டோபர், 2018

பணம் என்ற இச்சா சக்தி கொடுக்கும் லட்சுமி

வணக்கம். பணம் என்ற இச்சா சக்தி கொடுக்கும் லட்சுமி .புரட்டாசி மாதம் வளரபிறை பிரதமை தொடங்கி நவமி திதி வரை உள்ள காலம் நவராத்திரி காலமாகும் .பிரதமை திதி முதல் திருதியை திதி வரை உள்ள காலம் கிரியா சக்தி கொடுக்கும் துர்க்கையின் ஆட்சி காலம்.சதுர்த்தி திதி முதல் சஷ்டி திதி வரை உள்ள காலம் இச்சா சக்தியை கொடுக்கும் லட்சுமியின் ஆட்சி காலமாகும்.கிரியா என்ற எண்ணம் செயல் வடிவமாகி ஆசை என்ற இச்சை ஏற்பட்டால் மட்டுமே ஒரு செயலை செய்ய முடியும் .ஒரு பொருள் வாங்க எண்ணம் என்ற செயல் மட்டும் இருந்தால் போதுமா?
பணம் கண்டிப்பாக தேவை ..அந்த இச்சா சக்தி கிடைப்பதற்கு லட்சுமி தேவிபை நவராத்திரி காலத்தில் வழிபட்டு லட்சுமி தேவியின் அருளைப் பெற்று மகிழ்ச்சி அடைவோம்.
நன்றி.

கிரியா சக்தி கொடுக்கும் துர்கா பரமேஸ்வரி

வணக்கம்.
கிரியா சக்தி கொடுக்கும் துர்கா பரமேஸ்வரி.நவராத்திரி புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமைதிதி முதல் திருதியை திதி வரை உள்ள காலம் துர்க்கையின் ஆட்சி காலமாகும்.பிரதமை திதியில் மகேஷ்வரியாக
வும்,துதியை திதியில் கவுமாரியாகவும்,திருதியை திதியில் வராஹியாகவும் உருவங்கள் மாறி கிரியா சக்திகளை துர்கா பரமேஸ்வரி வழங்குவாள்.கிரியா சக்தி என்பது செயல் வடிவமாகும்.எண்ணங்களை செயலாக மாற்றுவதற்கு துர்கா பரமேஸ்வரியின்  அருள் தேவை.அந்த கிரியா சக்தி என்னும் செயலை வழங்கும் துர்க்கையை  வணங்கி  அன்னையின் அருளைப் பெறுவோம்.
                              நன்றி .


செவ்வாய், 9 அக்டோபர், 2018

சாரதா நவராத்திரி

வணக்கம்.
சாரதா நவராத்திரி:புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை திதி தொடங்கி நவமி திதி வரை உள்ள காலம் சாரதா நவராத்திரி காலமாகும்.சரத் ருது காலத்தில் மக்களுக்கு நோய் நொடி  ஏற்படும் காலத்தில் 9நாட்களும் விரதம் இருந்து அன்னை, பராசக்தியை வழிபடும் போது நோய் துன்பத்தில் இருந்து நலம் பெறலாம்.'தேவி மஹாத்மியத்தில் அம்பாளின் அவதார வைபவம் விளக்கப்பட்டுள்ளது.மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றிய பண்டகாசுரன் என்ற கொடிய அரக்கன் சிவனிடம்  இருந்து பெற்ற அரிய பலத்தால் அமர்களை அளவுக்கு மீறி தொல்லைபடுத்தினான்.இவனை சம்ஹாரம் செய்வதற்காக வேண்டி தேவி ஒன்பது ராத்திகளில் வெவ்வேறு

உருவங்களைக்
 கொண்டு அசுரனுடன் போர் புரிந்தாள்.தேவி போராடியே ஒன்பது ராத்திரியை ' சாரதா நவராத்திரி 'என கொண்டாடுகிறோம். பத்தாம் நாள் தேவியானவள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்கிறாள்.பண்டாசுரனை வெற்றி கொண்ட பத்தாம் நாளை நாம் விஜய தசமி என கொண்டாடுகிறோம்.நன்றி!

திங்கள், 8 அக்டோபர், 2018

நவராத்திரியில் கொலுவிருக்கும் நாயகி

வணக்கம்.
நவராத்திரியில் கொலுவிருக்கும் நாயகி .
புரட்டாசி மாதம் சுக்கிலம் பட்சம் ,பிரதமை திதி முதல் நவமி திதி வரை 9நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.பிரதமை திதி தொடங்கி திருதியை திதி வரை முதல் 3நாட்கள் கிரியா சக்தியாக துர்கா பரமேஸ்வரியும்,அடுத்த மூன்று நாட்கள் சதுர்த்தி திதி  தொடங்கி சஷ்டி திதி வரை இச்சா சக்தியாக மஹா லட்சுமியும்,கடைசி மூன்று நாட்கள் சப்தமி திதி முதல் நவமி திதி வரை ஞான சக்தியாக மஹா சரஸ்வதியும் கொலுவிருப்பார்கள். பெண்கள்  நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து வழிபடும் போது கிரியா சக்தி,இச்சா சக்தி,ஞான சக்தியை பெற்று நலமுடன் வாழலாம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

கிரகங்களின் பலம்

வணக்கம்.
ஜாதகத்தில் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் நன்மை செய்வதிலும், தீமை செய்வதிலும் சரி பலமுடையவர்களாக இருப்பார்கள்.நீசம் பெற்ற கிரகங்கள்  வக்கிரம் பெற்றால் அதிக பலம் பெறும். உச்சம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றால் பலம் இழந்து விடும்.1,4,5,7,9,10ஆம் இடங்கள் சுப ஸ்தானங்கள்.2,3,11ஆகியவை மத்திம ஸ்தானங்கள்.6,8,12ஆகிய ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள்.நன்மை செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானங்களை தவிர்த்து எங்கு நின்றாலும் நன்மையைத்தான் செய்யும்.தீமை செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானமான  6,8,12 ஆம் இடங்களில் இருக்கும் போது மத்திமமான பலன்களை செய்யும்.பாவ கிரகங்கள்2,3ஆம் இடங்களில் இருக்கும் போது நன்மை செய்யும்.
                  நன்றி!

செவ்வாய், 2 அக்டோபர், 2018

விநாயகரின் வித்தியாசமான படங்கள்

வணக்கம்.
விநாயகரின் வித்தியாசமான படங்கள் 1. பால கணபதி 2. ஹேரம்ப கணபதி 3.வீர கணபதி 4.மஹா கணபதி
 



குருப் பெயர்ச்சிப் பலன்கள்:மீனம்

வணக்கம்.
மீனம்:பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்த  மீனம் ராசி நேயர்களே!
சாந்தமும்,தயாள குணமும், பிறருக்கு உதவும் பெருந்தன்மை உள்ளம் கொண்ட உங்கள் ராசிக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)  வியாழக்கிழமை இரவு 10.05 மணி அளவில் இது வரை அஷ்டம ஸ்தானமான 8ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவான் பார்வையை பெறும் ராசிகள்,  ஜென்ம ராசியான மீனம் ராசி,3ஆம் இடமான ரிஷபம் ராசி,
5ஆம் இடமான கடகம் ராசி .குரு பார்வையை1,3,5 இடங்கள் பெறுகின்றன.
 குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்
உங்கள் ராசி அதிபதி குரு பகவான் என்பதால் உங்கள் செல்வாக்கும்,சொல் வாக்கும் உயரப்போகிறது.மக்கள் மத்தியில் பிரபலமான மனிதனாக தெரிவீர்கள் உங்கள் புகழ் ஓங்கும்.வாழ்கை சீராகும்.
முயற்சி ஸ்தானமான 3ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் உங்கள் இளையசகோதர ஸ்தானம் சிறப்படையும்.அவர்கள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து நீங்கள் வியப்பு அடைவீர்கள்.
5ஆம் இடமான கடக ராசியை குரு பகவான் பார்ப்பதால் குல தெய்வம் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பக்கும்.தலைமை தாங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைவீர்கள்.உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து சகல மரியாதையுடன் கிடைக்கும்.சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்கும் .சிதலமடைந்த வீட்டை புதுப்பிப்பீர்கள்.
உங்கள் ராசி அதிபதி குரு பகவானன வியாழக்கிழமை காலை 6-7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.ஸாபி பாபாவை வியாழக்கிழமை விரதம் இருந்து வேண்டுதல் செய்ய சிறப்பான பலன்கள் நடைபெறும்.
                        நன்றி!

திங்கள், 1 அக்டோபர், 2018

குருப் பெயர்ச்சிப் பலன்கள்:கும்பம்

வணக்கம்.
கும்பம் :அவிட்டம் 3,4,சதயம்,பூரட்டாதி 1,2,3 பாதங்களில் பிறந்த கும்பம் ராசி நேயர்களே!
பொறுமையும்,பெருமையும் அமையப் பெற்ற உங்களுக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)
 வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9 பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், கும்பம் ராசிக்கு 2,4,6ஆம் இடமாகும்.
குரு பகவான் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் 10ஆம்இடத்திற்கு குரு பகவான் வந்தால் பதவி பறிபோகும் என பயப்பட வேண்டாம்.10ஆம் இடத்திற்கு குரு வரும் சமயம் புதிய தொழில் உருவாகும்.
தன ஸ்தானமான 2ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் திரண்ட செல்வம் கிடைக்கும்.புதிய சிந்தனை உருவாகும்.ஒரு சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்றி அமைப்பார்கள்.
நான்காம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் தாய்,தந்தையர் ஆதரவு கிடைக்கும்.அவர்களின் பாச மழையில் சந்தோஷம் அடைவீர்கள்.
தடை பெற்ற கல்வி தொடரும்.
ருண,சத்ரு,ரோக ,கடன் ஸ்தானமான 6ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சிறிய வைத்திய செலவு செய்தாலே நோய் நீங்கிவிடும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.வழக்குகள் சாதகமாக முடியும்.
உங்கள் ராசி அதிபதி சனி பகவானுக்கு சனி கிழமை  காலை 6-7 மணி அளவில் சனி ஓரையில் நல்லெண்நெய் அபிஷேம் செய்து நல்லெண்நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பான பலன்கள் நடை பெறும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்கள் நடை பெறும் .
                             நன்றி!

குருப் பெயர்ச்சிப் பலன்கள் :மகரம்

வணக்கம்.
மகரம் :உத்திராடம் 2,3,4பாதங்கள் ,திருவோணம்,அவிட்டம்1,2பாதங்களில் பிறந்த மகர ராசி நேயர்களே!
விடாமுயற்சியும்,காரிய சித்தியும் உள்ள உங்களுக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில்  இது வரை ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் துலாம் ராசியில்  சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9  பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் ,மகர ராசிக்கு 3,5,7ஆம் இடமாகும்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவான் லாப ஸ்தானமான 11வீட்டில் இருப்பதால் இது வரை உடலாலும் மனதாலும் துன்பம் அடைந்த நீங்கள் புத்துணர்ச்சி பெற்று செயல் படப் போகிறீர்கள்.இது வரை சென்று வராத புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.வீட்டை புதிப்பித்து புதிய வர்ணம் தீட்டுவீர்கள்.
வெற்றி ஸ்தானமான 3ஆ,ம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் சிறிய தூர சுற்று பயணங்கள் வெளியூர் செல்வீர்கள்.
குரு பகவான் 5ஆம் இடத்ததை பார்ப்பதால் பூர்வீக வழியில் உள்ள சிக்கல்கள் சரிபான முடிவிற்கு வரும்.உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
குரு பகவான்  ஸப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் நட்பு வட்டம் விரிவடையும்.போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
சிலர் அதிர்ஷ்ட வசமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.கிழக்கு நோக்கிய திசையில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
உங்கள் ராசி அதிபதியான சனி பகவானுக்கு சனிக்கிழமை சனி ஓரையில் ௧ாலை 6-7மணி அளவில் நல்லெண்நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
                                   நன்றி.


திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...