வெள்ளி, 12 அக்டோபர், 2018

அண்ணன்-தங்கை அவதாரம் பிரம்மா- சரஸ்வதி

வணக்கம்.சத்தியலோகத்தில் தம்பதிகளாக  வாழ்ந்து வந்த பிரம்மா,சரஸ்வதி க்குகிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.படைப்பு தொழிலுக்கு நான் தான் அதிபதி என்றுபிரம்மாவும்,கல்விக்கு அரசி நான் தான் என சரஸ்வதியும் வாதிட,வாக்கு வாதம்முற்றி இருவரும்ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர்.இதனால் பூலோகத்தில் சோழ  நாட்டில் புண்ணிய கீர்த்தி -சோபனை என்ற தம்பதிகளுக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும் (பிரம்மா), சிரத்தை (சரஸ்வதி)மகளாகவும் அவதரித்தனர்.அவர்களுக்கு திருமண வயது வந்ததும் வரண் தேட ஆரம்பித்தார்கள்.அப்பொழுது அவர்கள்இருவருக்கும் தான் யார் என்பது நினைவுக்கு வந்தது .சகோதரநிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்தால் ஊர்,உலகம் பழிக்குமே என அஞ்சினர்.பெற்றோருக்கு இவ்விடம தெரிய வந்தது .சிவனை நினைத்து பிராத்தணை செய்தனர்.அவர்கள் பிராத்தணையை கேட்ட சிவன் அவர்கள் முன்பாக தோன்றி இப்பிறவியில் சகோதர ஸ்தானத்தில் அவதரித்தால் நீங்கள் திருமணம் செய்ய இயலாது. எனவே நீ மட்டும் தனியாக கோயில் கொண்டு கன்னிகையாக இருந்து கல்வி செல்வத்தை  வழங்கு எனஅருள்பாலித்தார்.வாக்கு சித்தி தரும் வாணியாக சரஸ்வதி தேவி கூத்தனூர் ஆலயத்தில் அருள் பாலிக்கிறாள்.கன்னியாக வாக்கு ,கல்வி செல்வம் தரும் வாணியை சரண்அடைவோம்.வாக்கு சித்தி பெறுவோம்.
                             
  நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...