வணக்கம்.சிவனுக்கும்,மோகினியாக மாறிய விஷ்ணு பகவானுக்கும் மகனாக பிறந்தவர் ஐயப்பன்.கேரளாவில் பந்தளமகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி சிவ பெருமானை வேண்டிவந்தார்.அதே சமயத்தில் மகிஷாசுரனின் தங்கையான மகிஷி என்ற அரக்கி தேவர்கள் மற்றும் ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.காட்டில் பிறந்த ஐயப்பன் மகிஷியை அழிப்பதற்காக அவதரித்தவன்.
சிவனும்,விஷ்ணுவும் குழந்தையை மரத்தடியில் விட்டு விட்டு தேவலோகம் சென்று விட்டார்கள்.பந்தளமகாராஜா விலங்குகளை வேட்டையாட காட்டிற்கு செல்லும் போது காட்டில் மரத்தடியில் ஒரு குழந்தையின் அழகின்ற சப்தம் கேட்டு அந்த குழந்தையை பார்த்தார்.என் குழந்தையில்லா குறையை போக்கவே இறைவன் அளித்த பரிசாக எண்ணி அந்த தெய்வ அம்சமான குழந்தையை அரண்மணைக்கு கொண்டு சென்றான்.அரசியும் மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு தன் குழந்தையாகவே வளர்த்து வந்தனர்.மணிகண்டன் வந்த நேரம் அரசி கரு உற்றாள்.ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.உனக்கு என்று ஒரு மகன் இருக்கும் போது மணிகண்டனை நீ தலைப்பிள்ளை போல் வளர்த்து வருகிறாய் என்று அரசபையில் உள்ள சில புல்லுரிவிகள் அரசியின் மனதை குழப்பமடைய செய்தார்கள்.
தீய போதனையால் அரசிமாறினால் தான் வயிற்று வழியால் அவதிபடுவதாய் பொய் உரைத்தாள்.அரசவை வைத்தியரிடம் புலிப்பால் குடித்தால் மட்டுமே அரசியின் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.தாய் சொல்லை தட்டாத ஐயப்பன் புலிப்பால் கொண்டு வருவதற்காக காட்டிற்கு புறப்பட்டான்.வழியில் வந்த மகிஷி ஐயப்பனை தடுத்தாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியை வதம் செய்தான்.அவதார மகிமை பூர்த்தியானது.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரன் புலியாக மாற மற்ற தேவர்கள் புலியாக சூழ புலி மேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.
புலி மேல் வந்த ஐயப்பனை கண்டு பதறிப்போனாள் அரசி.தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ,புலிகளை காட்டிற்கு திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் செய்து அருளினான்.மேலும் தன் அவதார காலம் பூர்த்தி அடைந்து விட்டதாகவும்,தான் சபரிமலை சென்று தவம் இருக்கப்போவதாகவும் ,தன்னை காண வேண்டுமானால் நீங்கள் சபரிமலைக்குதான் வர வேண்டும் என்று ஐயப்பன் கூறினான்.ஐயப்பனை வணங்கி அவன் அருளைப் பெறுவோம்.
நன்றி.
சிவனும்,விஷ்ணுவும் குழந்தையை மரத்தடியில் விட்டு விட்டு தேவலோகம் சென்று விட்டார்கள்.பந்தளமகாராஜா விலங்குகளை வேட்டையாட காட்டிற்கு செல்லும் போது காட்டில் மரத்தடியில் ஒரு குழந்தையின் அழகின்ற சப்தம் கேட்டு அந்த குழந்தையை பார்த்தார்.என் குழந்தையில்லா குறையை போக்கவே இறைவன் அளித்த பரிசாக எண்ணி அந்த தெய்வ அம்சமான குழந்தையை அரண்மணைக்கு கொண்டு சென்றான்.அரசியும் மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு தன் குழந்தையாகவே வளர்த்து வந்தனர்.மணிகண்டன் வந்த நேரம் அரசி கரு உற்றாள்.ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.உனக்கு என்று ஒரு மகன் இருக்கும் போது மணிகண்டனை நீ தலைப்பிள்ளை போல் வளர்த்து வருகிறாய் என்று அரசபையில் உள்ள சில புல்லுரிவிகள் அரசியின் மனதை குழப்பமடைய செய்தார்கள்.
தீய போதனையால் அரசிமாறினால் தான் வயிற்று வழியால் அவதிபடுவதாய் பொய் உரைத்தாள்.அரசவை வைத்தியரிடம் புலிப்பால் குடித்தால் மட்டுமே அரசியின் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.தாய் சொல்லை தட்டாத ஐயப்பன் புலிப்பால் கொண்டு வருவதற்காக காட்டிற்கு புறப்பட்டான்.வழியில் வந்த மகிஷி ஐயப்பனை தடுத்தாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியை வதம் செய்தான்.அவதார மகிமை பூர்த்தியானது.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரன் புலியாக மாற மற்ற தேவர்கள் புலியாக சூழ புலி மேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.
புலி மேல் வந்த ஐயப்பனை கண்டு பதறிப்போனாள் அரசி.தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ,புலிகளை காட்டிற்கு திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் செய்து அருளினான்.மேலும் தன் அவதார காலம் பூர்த்தி அடைந்து விட்டதாகவும்,தான் சபரிமலை சென்று தவம் இருக்கப்போவதாகவும் ,தன்னை காண வேண்டுமானால் நீங்கள் சபரிமலைக்குதான் வர வேண்டும் என்று ஐயப்பன் கூறினான்.ஐயப்பனை வணங்கி அவன் அருளைப் பெறுவோம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக