முக்திக்கு விரோதியான கர்மத்தைச் செய்துகொண்டு முக்தியை அடைய முயல்வது வீண் முயற்சியே ஆகும்.மருந்தை உட்கொள்கிற அதே சமயத்தில் பத்தியம் செய்யாமல் இருந்தால் நோய் குணமாகாது.அது போலக் கர்மத்தைச் செய்து கொண்டே முக்தி பெற முயற்சிப்பதும் பலனளிக்காது என்பது தான் பி்ரச்சனை.உணவு எதுவும் இல்லாமல் உயிர் வாழ முடியாதாகையால் நாம் பிழைத்திருப்பதற்காக எதையாவது உண்டு தான் ஆகவேண்டும்.தவறான உணவை உட்கொண்டுவிட்டால் உடல் ஆரோக்கியம்கெட்டுப் போய்விடும் என்ற பயத்தால் உணவே வேண்டாம் என்று விட்டுவிட்டால் உடலே நசித்துப் போய்விடும்.எனவே புஷ்டியை தரக்கூடிய நல்ல உணவையே சாப்பிடவேண்டும்.அதைப்போல கர்மங்களால் சம்சாரப்பிணைப்பு இறுகும் என்ற பயத்தால் கர்மங்களையே விட்டுவிடக்கூடாது.கெட்ட காரியங்களால் மட்டுமே இந்த பந்தம் ஏற்படும்.நல்லெண்ணத்துடன் நல்ல கர்மங்களைச் செய்வதினால் எந்த தீங்கும் ஏற்படாது.அத்தகைய கர்மம் முக்திக்கு தடையாகவோ எதிரியாகவோ இருக்காது.நல்ல கர்மங்களை மட்டும் செய்வதினால் ஆத்மா பலம் அடைகிறது.கர்மங்களில் பந்தத்தை ஏற்படுத்துபவை எவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். கர்மம், விகர்மம் இவைகளை பிரித்தறிந்து எந்த கர்மம் நம்மை சம்சாரத்தில் அழுத்தாமல் பரமாத்மாவின்பால் கொண்டு செல்கிறதோ அத்தகைய நற்கருமங்களை அறிந்து கொண்டு அவைகளை செய்வதினால் வாழ்க்கையில் உண்மையான லாபத்தைப் பெறலாம்.
நன்றி.
நன்றி.