புதன், 21 ஆகஸ்ட், 2019

கலியுகவரதர் ஶ்ரீகிருஷ்ணர்.


நல்ல செயலை செய்பவனுக்கு அதை செய்து முடிக்கவில்லை என்றாலும் அதனால் தீங்கு ஒன்றும் கண்டிப்பாக ஏற்படாது.இது பகவான் அளித்துள்ள வாக்குறுதி.இப்பிறவியில் நம் சாதனை முற்றுப்பெறாவிட்டால் அடுத்த பிறவியில் அதற்கு வேண்டிய வாய்ப்பை பகவான் நமக்கு ஏற்படுத்தித்தருவார்.தியானத்திற்கு பக்தியின் பின்பலம் அவசியம்.பக்தியில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. ஒன்று ஞானம் மற்றொன்று அன்பு.ஒருவனுடைய குணநலன்களின் பெருமையை அறிந்து கொள்ளாமல் அவனிடம் அன்பு செலுத்தினால் அது பாசமாகும். குழந்தைகளிடமும்,குடும்பத்தாரிடமும் அன்பை செலுத்தும் போது அதில் இந்த பாசம் தான் நிறைந்திருக்கும்.ஆனால் இந்த கலியுகத்தில் குணத்தைப் பார்க்காமல் அவர்களிடம் உள்ள பணத்தின் மதிப்பை பார்த்துத்தான் பாசம் வருகிறது. அதே போல பகவான் மகிமையை அறியாமல் அவனிடம் செலுத்துகிற அன்பு குருட்டு பக்தியாகும்.அவனது மகிமையை அறிய அறிய புனிதமான பக்தி மனதில் பெருகும்.கிரகங்கள்,நட்சத்திரங்களுகிடையேயுள்ள உறவு,நாம் சுவாசிக்கும் முறை இவ்வாறு நூற்றுக்கணக்கான இயற்கையின் இயக்கங்களையும்,அமைப்புக்களையும் பார்க்கும் போது ஒரு நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகத்தான் இந்த உலகம் நமக்குப் புலப்படுகிறது.இவை அனைத்தும் கலியுகவரதர் ஶ்ரீ கிருஷ்ணரின் லீலைகளே!


x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...