சுவைகளில் ஆருடம் .ஒரு காரியத்தை செய்து விட்டு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும்பொழுது சுவையாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தால் அந்த காரியம் வெற்றியடையும் அவ்வாறு இல்லாமல் நாம் விரும்பியபடி உணவு சுவை இல்லாமல் இருந்தால் அந்த காரியம் நடைபெற தாமதமாகும், பெரிய லாபமும் இருக்காது. இதை எவ்வாறு சோதனை செய்வது தேர்வு எழுதிவிட்டு உணவகத்தில் ஏதேனும் ஒரு சிற்றுண்டி வாங்கிச்சாப்பிட வேண்டும். அந்த உணவு அவன் விரும்பியபடியும், திருப்தியாகவும் இருந்தால் பரிட்சை முடிவு சாதகமாய் இருக்கும். அவ்விதம் அந்த உணவு காரமாகவும், சுவை அற்றதாகவும் இருந்தால் நிச்சயமாக பரிட்சை முடிவு சாதகமற்றதாக இருக்கும். கசப்பாக ஏதாவது சாப்பிட நேரிடில் அன்று பண செலவு ஏற்படும் என்று அர்த்தம். அதிக இனிப்பான உணவு எதார்த்தமாக சாப்பிட நேர்ந்தால் தான் விரும்பிய நபரிடம் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நபரினால் இவருக்கு ஆதாயம் ஏற்படும். உப்பு அதிகமான உணவு சாப்பிட நேர்ந்தால் உறவினரிடம் பகை ஏற்படும். சற்று புளிப்பு சுவை உள்ள ஆரஞ்சு பழச்சாறு எதிர்பாராதவகையில் கிடைத்தால் விரைவில் அவருடை கடன் அடைப்பதற்கான ஏதாவது வழி ஏற்படும். நன்றாக பழுத்த மாம்பழம் சுவையுடன் கிடைத்தால் தனது உறவினருக்கு மகன் அல்லது மகள் பிறக்கும் நல்ல செய்தி கிடைக்கும். யாராவது நமக்கு பழம் வாங்கிக் கொடுத்தால் அந்த பழம் நாம் சாப்பிடும்பொழுது அழுகிய நிலையில் இருந்தால் பெரிய நஷ்டம் தொழிலில் ஏற்படும் என்று அர்த்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக