ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆடிமாதம் 18 ஆம் நாள் (3 - 08 - 2023) வியாழக்கிழமை அன்று அம்மன் கோயில்களிலும், திருச்சி காவேரி கரைகளிலும், மற்ற நீர்நிறைந்த இடங்களிலும், கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டவர்கள் போர் முடிந்தபின்பு தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை சுத்தம் செய்து ஆற்றங்கரையில் போரில் இறந்த முன்னோர்களுக்கு ஆடி 18 ஆம் பெருக்கு அன்று திதி கொடுத்த தினம்.
சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேரும் என்பது நம்பிக்கை. ஆடி பதினெட்டாம் நாள் அன்று மக்கள் நீர் நிரம்பிய இடங்களான ஆறு, குளம், கடல் போன்ற இடங்களில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். புதிதாக திருமணமான பெண்கள் தங்கள் தாலி சரடை மாற்றிக்கொள்ளும் நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக