ஞாயிறு, 14 ஜூலை, 2019

கல்வி செல்வம் தந்த காமராசர்.

விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் குமாரசாமிக்கும் ,சிவகாமி அம்மையார்க்கும் தவப் புதல்வனாக காமராசர் பிறந்தார்.காமராசர் ஆறு வபதிலேயே தந்தையை இழந்துவிட்டார்.வறுமை காரணமாக ஆறாம் வகுப்பில் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
          தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவராக இருந்த காமராசர் 13.04.1954 -ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
          "  வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
                   வாழும் மனிதருக்கெல்லாம்
            பயிற்றிப் கல்வி தந்து -இந்தப்
                 பாரை உயர்த்திட வேண்டும்."
என்னும் பாரதியார் கனவை நனவாக்க ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.சிற்றூர் தோறும் பள்ளிகள் தொடங்க ஆனணயிட்டார்.பள்ளி மாணவர்களில் ஏழை,பணக்காரர் வேறுபாட்டைக் களைய பள்ளிச் சீருடைத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
            நேர்மை,உண்மை,பணிவு,துணிவு ,எளிமை,இனிமை முதலியன அவரின் தலைசிறந்த பண்புகள்.தமிழர்கள் வாழ்வில் எழச்சியூட்டிய தந்தை பெரியார்,இவரைக் "கல்விக்கண் கொடுத்த வள்ளல் காமராசர் ”என பாராட்டினார்.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...