வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார்.நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது.எனவே ஓய்வெடுக்க விரும்பினார்.வழியில் சத்திரம் ஒன்று இருந்தது,அதன் திண்ணையில் படுத்து உறங்கினார்.அப்போது ஒருவன் அங்கு வந்தான்.படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான் அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான்.தங்கக்கடுக்கனை மெதுவாக கழற்றினான்.அவனது செயலை அறிந்தும் வள்ளளார் கண் மூடியபடியே படுத்திருந்தார்.ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன்,மறு காதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார்.அவன் அதையும் கழற்றிக் கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான்,அப்போது வள்ளலார் மென்மையான குரலில் "அப்பா ,இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள்.குறைந்த விலைக்கு விற்றுவிடாதே!மேலும் ,ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.எனவே தான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப்படுத்தேன்" என்றார்.வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குனிந்தான்.இவ்வாறு தம் பொருளை கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டிய உயர்ந்த உள்ளம் கொண்டவர் வள்ளலார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக