வெள்ளி, 7 செப்டம்பர், 2018

வக்ரமடைந்த கிரகங்கள் தரும் பலன்கள்

வணக்கம் .
வக்ரமடைந்த கிரகங்கள் தரும் பலன்கள்.
நவக்கிரகங்களில் சூரியன் ,சந்திரன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ,சனி போன்ற  கிரகங்கள் வக்ரமடைகின்றன.
செவ்வாய், சனி, குரு போன்ற கிரகங்கள் இருக்கும் வீட்டிற்கு 5வது வீட்டிற்கு சூரியன் வரும் போது சனி, செவ்வாய், குரு கிரகங்கள் வக்ரம் அடைகின்றன.
7வது வீட்டிற்கு சூரியன் வரும் போது அதிக வக்ரம் அடைகின்றது.
9வது வீட்டிற்கு வரும் போது வக்ரம் நிவர்த்தி அடைகின்றது .
உச்சம் பெற்ற கிரகங்கள் வக்ரம் அடைந்தால் நல்ல பலனுக்கு பதிலாக தீய பலன்களை கொடுக்கின்றன.
   நீச்சம் அடைந்த கிரகங்கள் வக்ரம் அடைந்தால் தீய பலனுக்கு பதிலாக நல்ல பலன்களை கொடுக்கின்றன .
ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்திருந்தால் அந்த நபர்கள் பிடிவாதம் உள்ளவர்கள்  .மருத்துவத்துறை,விஞ்ஞானத் துறையில் சாதனை படைத்தவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்த நிலையில் இருக்கும்.
          ஜாதகத்தில் புதன் வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் தனக்குத்தானே சிந்தனை செய்து கொண்டு இருப்பார்கள். புதன் நீச்சம்அடைந்து வக்ரம் அடைந்தவர்கள் கணித துறையில் சாதனை படைப்பார்கள்.
           ஜாதகத்தில் குரு வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் யாரும் செய்யமுடியாத காரியங்களை சுலபமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்களின் ஆற்றல்களை இவர்கள் பயன்படுத்துவார்கள்.
             ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் அதிகமாக உல்லாசமாக பொழுதைக்களிப்பார்கள். அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்க்கை நடத்துவார்கள்.
           ஜாதகத்தில்  சனி கிரகம் வக்ரம் அடைந்த நிலையில் இருந்தால் தனித்து வாழ்வார்கள், வெக்கப்படுவார்கள். காரியங்களை  சாதிப்பதில் தயக்கம் இருக்கும்.                                                                                 நன்றி.



2 கருத்துகள்:

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...