சனி, 5 ஜூன், 2021

முகப்பொலிவிற்கானஹெர்பல் பவுடர்


தேவையான பொருட்கள்

பாசிப்பயறு - 250 கிராம்.

பார்லி - 100 கிராம்.

வெள்ளரி விதை - 50 கிராம் .

கசகசா - 10 கிராம்.

ரெட் சாண்டல் - 50 கிராம்.

பச்சை கற்பூரம் - 5 கிராம்.

காய்ந்த எலுமிச்சைத்தோல் - 5

செய்முறை:

பாசிப்பயறு, பார்லி, வெள்ளரி விதை, கசகசா, ரெட் சாண்டல், பச்சை கற்பூரம், காய்ந்த எலுமிச்சைத் தோல் இவை அனைத்தையும் மிக்சியில் அரைத்து சலித்து வைக்கவும். 1ஸ்பூன் இந்த ஹெர்பல் பவுடருடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்

வெள்ளி, 20 டிசம்பர், 2019

கோதுமை லட்டு.

 கோதுமை லட்டு
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -600கிராம்.
சர்க்கரை-250கிராம.
முட்டை-2.
தேங்காய் எண்ணெய்-500மி.லி.
தேங்காய்ப் பால்-1கப்.
மஞ்சள் தூள்-தேவையான அளவு.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
 கோதுமை மாவில் 500 கிராம் மட்டும் எடுத்து தண்ணீர் கலந்து உப்பு சேர்த்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய்ப் பால் சர்க்கரை இவற்றை போட்டு பொன்னிறமாக வரும்வரை காய்த்து எடுக்க வேண்டும்.பிறகு பிசைந்து வைத்த மாவை அதனுள் கொட்டி பதத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவேண்டும்.
மீதமுள்ள 100கிராம் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் தூளையும் போட்டு நீர் ஊற்றி கெட்டியாக கிளறி வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டையாக உருட்டி கலக்கிய மாவினுள் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்க வேண்டும்.
சுவையான கோதுமை லட்டு தயார்.

கோழி அடை

கோழி அடை
தேவையான பொருட்க்கள்
கோழி-1கிலோ.
புழுங்கலரிசி-1/2படி.
தேங்காய்-1
மிளகாய் வத்தல்-10.
கொத்தமல்லி-3மேசை கரண்டி.
மஞ்சள்தூள்-2மேசை கரண்டி.
தேங்காய் எண்ணெய்-1மேசை கரண்டி.
கறிவேப்பிலை-சிறிதளவு.
தாளிப்பதற்கு:
தாளிப்பதற்கு தேவையான அளவு வெங்காயம்,பெருஞ்சீரகம்,பட்டை,கிராம்பு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3மணிநேரம் ஊறவைத்து கெட்டியாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
தேங்காயை துருவி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.கோழியை சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,மல்லியை வறுத்து சேர்த்து மைபோல் அரைத்துக்கொள்ளவும்.
 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம்,பட்டை கிராம்பு, நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவந்ததும் கோழி கறியை போட்டு சிறிது வதக்கி மிளகாய்த்தூள் அரைத்த
மசாலாவையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கறி பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறிவிட்டு மாவை சிறிய வடைகளாக தட்டி நடுவில் துளை போட்டு அதில் போடவும்.கறியும்,அடைகளும்
நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லியை நறுக்கிப் போட்டு இறக்கவும்.சுவையான கோழி அடை தயார்.


    

புதன், 30 அக்டோபர், 2019

மகிழம்பூ முறுக்கு

மகிழம்பூ முறுக்கு
தேவையான பொருட்கள்
பச்சரிசிமாவு-3கப்
பொரிகடலைமாவு-1-1/2கப்
கடலைமாவு-3டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்-3டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சீரகம்-1டேபிள் ஸ்பூன்
எண்ணெய்-பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
பச்சரிசி மாவு,பொரிகடலைமாவு,கடலைமாவு,உப்பு,சீரகம்,வெண்ணெய் மற்றும்சூடான எண்ணெய்2ஸ்பூன் அளவு விட்டு எல்லாவற்றையும் நன்றாக பிசைந்துபின்பு மகிழம்பூ முறுக்கு அச்சில் மாவை வைக்கவும். அடுப்பை பற்றவைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு மிதமான சூட்டில் வைத்து அச்சில் வைத்த மாவை பிழிந்து எடுக்கவும்.சுவையான மொறு மொறுப்பான மகிழம்பூ முறுக்கு தயார்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கர்மா.

முக்திக்கு விரோதியான கர்மத்தைச் செய்துகொண்டு முக்தியை அடைய முயல்வது வீண் முயற்சியே ஆகும்.மருந்தை உட்கொள்கிற அதே சமயத்தில் பத்தியம் செய்யாமல் இருந்தால் நோய் குணமாகாது.அது போலக் கர்மத்தைச் செய்து கொண்டே முக்தி பெற முயற்சிப்பதும் பலனளிக்காது என்பது தான் பி்ரச்சனை.உணவு எதுவும் இல்லாமல் உயிர் வாழ முடியாதாகையால் நாம் பிழைத்திருப்பதற்காக எதையாவது உண்டு தான் ஆகவேண்டும்.தவறான உணவை உட்கொண்டுவிட்டால் உடல் ஆரோக்கியம்கெட்டுப் போய்விடும் என்ற பயத்தால் உணவே வேண்டாம் என்று விட்டுவிட்டால் உடலே நசித்துப் போய்விடும்.எனவே புஷ்டியை தரக்கூடிய நல்ல உணவையே சாப்பிடவேண்டும்.அதைப்போல கர்மங்களால் சம்சாரப்பிணைப்பு இறுகும் என்ற பயத்தால் கர்மங்களையே விட்டுவிடக்கூடாது.கெட்ட காரியங்களால் மட்டுமே இந்த பந்தம்  ஏற்படும்.நல்லெண்ணத்துடன் நல்ல கர்மங்களைச் செய்வதினால் எந்த தீங்கும் ஏற்படாது.அத்தகைய கர்மம் முக்திக்கு தடையாகவோ எதிரியாகவோ இருக்காது.நல்ல கர்மங்களை மட்டும் செய்வதினால் ஆத்மா பலம் அடைகிறது.கர்மங்களில்  பந்தத்தை ஏற்படுத்துபவை எவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். கர்மம், விகர்மம் இவைகளை பிரித்தறிந்து எந்த கர்மம் நம்மை சம்சாரத்தில் அழுத்தாமல் பரமாத்மாவின்பால் கொண்டு செல்கிறதோ அத்தகைய நற்கருமங்களை அறிந்து கொண்டு அவைகளை செய்வதினால் வாழ்க்கையில் உண்மையான லாபத்தைப் பெறலாம்.
          நன்றி.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...